அனிதாவின் குடும்பம் சிரித்த முகமாக அவனை அனுப்பி வைத்தது.
அபிராமி அம்மா சம்மந்தி நீங்க அனிதாவோட முடிவை கேட்டுட்டீங்கனா. நாங்க அடுத்த நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சிருவோம்.
அதெல்லாம் நீங்க நடக்கவேண்டியத பாருங்க சம்மந்தி அனிதா எங்க பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டா என்று அனிதாவின் அம்மா கூற,
சிவகாமி இரு அவசரப்படாத என் பொண்ணோட முடிவுதான் இறுதியானது.
நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க சம்மந்தி என்ன இருந்தாலும் பொண்ணு சந்தோஷமா மனசுக்கு ஏத்த மாதிரி வாழனும் தான் ஒவ்வொரு பெத்தவங்களுக்கும் ஆசையா இருக்கும். அவள ஒரு வார்த்தை கேட்காம முடிவு பண்றது அவ்வளவு சரியா எனக்கு படல. அப்புறம் ஏதாவது பிரச்சனைனா பின்னால எல்லாருக்கும் கஷ்டம் சம்மந்தி. அதுக்கு தான் அவ கிட்ட கேட்டுட்டு நான் உங்களுக்கு உறுதியா சொல்றேன். அப்புறம் நீங்க நடக்க வேண்டியதை பாருங்க...
ஐயோ சம்மந்தி நான் எதையும் தப்பா எடுத்துக்கல. நீங்க அனிதா கிட்ட கலந்து ஆலோசிச்சு எந்த முடிவு சொன்னாலும் எனக்கு ஓகே தான். நான் உங்க பதிலுக்காக காத்திருக்கேன் என்று அபிராமி பணிவாக கூறினார்.
அவரின் பதிலில் திருப்தியுற்றவராய் வெங்கடாசலம் மற்றும் சிவகாமி அனிதாவின் அறையை நோக்கி சென்றனர்.
அனிதா உறங்கிக்கொண்டிருந்தாள். அருகிலிருந்த செவிலியர் சார் இப்போதைக்கு இவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நாளைக்கு வார்ட்-க்கு சேஞ்ச் பண்ணிடுவோம். அப்ப வந்து இவங்க கூட நீங்க இருக்கலாம். இப்ப இவங்களுக்கு ஓய்வு தேவைப்படுது அதனால யாரும் வராம பாத்துகோங்க சார். என்று இந்த செவிலியர் கூற, சரி என்று இருவரும் வெளியே வந்து விட்டனர்.
அங்கு அசோக்கையும் கார்த்திகையும் தேன்மொழி ஒரு வழி பண்ணிவிட்டாள்.
ரெண்டு பேரும் என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க. நீங்க எல்லாத்தையும் ப்ளான் பண்ணி பண்ணிட்டு இருக்கீங்க. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு உங்களுக்கு கூட தோணலையா அண்ணா. ஆமா எனக்கு ஒரு டவுட் நீங்க ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடியே மீட் பண்ணி இருக்கீங்களோ.
அசோக்கும், கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து ஒரு தெய்வீக சிரிப்பு சிரிக்க..... இப்பொழுது தேன்மொழிக்கு பிரஷர் உச்சத்திற்கு ஏறியது. இருவரையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அப்படி ஒரு முறை முறைத்தாள்.