கஷ்டப்படுத்திக்கிறிங்க...
இல்லப்பா நல்லா இருந்த பொண்ணு. இப்படி திடீர்னு வந்து படுத்துகிட்டா.....வீட்ல காய்ச்சல் வந்து கூட இவ படுத்து நான் பார்த்ததில்லை. அதுதான் மனசு கிடந்து அடிச்சிக்கிது.
கவலைப்படாதீங்க அங்கிள் எல்லாம் சரியா போயிடும்.
ம்ம்.. சரிமா.....அம்மாடி தேன்மொழி நீ எப்ப கல்யாணம் பண்ணிக்க போறதா உத்தேசம். வாழ்க்கை ஃபுல்லா இப்புடியே ஒண்டியாவே காலத்த தள்ள போறியா.....
தண்ணி குடித்துவிட்டு வந்தவன் இதனைக்கேட்ட ஆணி அடித்தால் போல் அந்த இடத்திலேயே நின்றான்.
ஒரு அதிருப்தியான சிரிப்பை உதிர்த்தவள். நா எங்க அங்கிள் தனியா இருக்கேன். ஸ்வேதா என்கூட இருக்காளே...
சும்மா விபரம் இல்லாம பேசாத தேனு இந்த வாழ்க்கைய வாழ்றதுக்கு உனக்கு ஒரு துணை கண்டிப்பா வேணும்.
இப்போதைக்கு அந்த மாதிரி ஐடியா எதுவும் இல்லை ஆன்ட்டி.
நீ ஒத வாங்கப்போற.... உனக்கே தெரியாம நடந்த ஒரு தப்புக்காக.... உன் வாழ்க்கையவே வீணாக்க போறியா....
ஏன் ஆன்ட்டி இப்ப நான் நல்லாதா வாழ்ந்துட்டு இருக்கேன். ஒரு ஆண் துணை இல்லாம வாழ்க்கையை வாழ முடியாதா என்ன.....
விதண்டா விதமா பேசாத தேனு.
ஆன்ட்டி ப்ளீஸ் இந்த பேச்சு விடுறிங்களா.....
சரி விடு சிவகாமி ஹாஸ்பிடல்ல உக்காந்து இத பேச வேணாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.
தேன்மொழி அப்பாடா என்று நிம்மதி அடைந்தாள்.
இவர்கள் சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டிருந்தவனது மனம் என்ன மாதிரியாக உணருகிறது என்று அவனுக்கே தெரியவில்லை. அவளுக்கு கல்யாணம் ஆகவில்லை என்ற சந்தோஷமா....... இல்லை அவள் வாழ்வில் என்ன நடந்தது ஏன் இப்படி விரக்தியாக பேசுகிறாள் என்ற துக்கமா..... தன்னை யாரென்று சொன்னால் விரும்புவாளா...... இல்லை வெறுப்பாளா...... என்று பலவித யோசனையுடன் அதே இடத்தில் அவன் நிற்க.....
இவர்களிடம் பேசிவிட்டு அசோக் டீ வாங்குவதற்காக..... வெளியே வர அங்கு படிக்கட்டின் ஓரத்தில் கார்த்திக் சாய்ந்து நின்று கொண்டிருந்ததைப் பார்த்து, அவன் அருகில் சென்றான்.
கார்த்திக் தோல் மேல் கை வைத்தவன் என்ன ஆச்சு கார்த்திக் ஏன் இங்க நிக்கிற.....
ஒன்னுமில்ல அசோக் அனிதாவோட அப்பா,அம்மா இருந்தாங்க. அதான் வரலாமா....