தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ
ஒரு அரை மணி நேரம் தர்ஷீ போர்வைக்குள் போக்கு காட்ட...... பிறகு மனம் தாளாமல் போர்வையை சிறிது விலக்கி பார்க்க..... அவன் அமர்ந்த நிலையில் இரு கைகளையும் சேர்த்து மடக்கி தலையை தாங்கியபடி விட்டத்தை பார்த்தபடி முழித்திருந்தான்.
அச்சோ பாவம் என்று நினைத்தவள். போர்வையிலிருந்து வெளிவந்து,
என்ன கதிர் தூங்கலயா????
அவன் பார்வையை அவள் மேல் செலுத்தி நீங்க இன்னும் தூங்கலையாங்க......
அது.... அது நான் தூங்கிட்டு தான் இருந்தேன். திடீர்னு விழிப்பு வந்துச்சு.
ஓ..... ஏங்க நான் அப்புடி .....
கதிர் எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம். படுங்க கதிர். எனக்கு தூக்கம் வருது.
நீங்க தூங்குங்க தர்ஷீ.....
அவள் போர்வைக்குள்ளிருந்து முழுதாக வெளியே வந்து அவனை முறைத்த படியே அமர,
அவள் பார்வையை கண்டவன். கப்சிப் என்று படுத்துக்கொண்டான்.
அந்த செய்கையில் அவளுக்கு இதழோரம் மலர.......
கதிர் குளுரலயா உங்களுக்கு???
இல்லங்க.....
உண்மையாவா???
கொஞ்சமா தான் இருக்கு தர்ஷீ.....
ம்ஹூம்..... என்னோட பிளாங்கெட் கொஞ்சம் லாங் - ஆ தான் இருக்கு கதிர் யூஸ் பண்ணிக்கோங்க....
இல்லல்ல நான் இப்பு ......
அவன் கூறி முடிப்பதற்குள் அவனுக்கும் சேர்த்து போர்வையை போர்த்தி விட்டாள்.
அவன் செய்வதறியாது திருதிருவென்று முழிக்க ....
அவனுக்கு மிக அருகில் அவன் முகத்தை பார்த்தப்படியே அவளும் படுத்தாள்.
தூங்குங்க கதிர்.
தர்ஷீ நா......
அவன் உதட்டின் மேல் விரலை வைத்தவள். காலைல பேசிக்கலாம் இப்ப தூங்குங்க.......
ம்ம்... என்று மண்டையை ஆட்டியவன். அவள் கண்களை பார்த்தபடியே இருக்க சிறிது நேரத்தில் உறங்கினான்.