அப்படியா சரி வாங்க. கதிர் நாம கிளம்புவோம்.
கிளம்பலாம் தர்ஷீ. இந்தாங்க காஃபி குடிங்க என்று கப்பை நீட்டியவன். இல்லல்ல இது ஆறி போயிருச்சு உங்களுக்கு சூடா கொண்டவரேன் வெயிட் பண்ணுங்க என்று சமையலறையிலிருந்து இருவருக்கும் காபி எடுத்து கொண்டு வந்து ஒன்றினை தர்ஷினியிடம் கொடுத்தவன். மற்றொன்றை இவனும் பருகியபடியே சோபாவில் இருவரும் அமர்ந்திருந்தனர்.
தர்ஷினி அந்த லோன் அரேன்ஞ் பண்ண முடியுமா???? என்று அவன் டிவியை பார்த்தபடியே கேட்க......
வாயிற்குள் சிரிப்பை அடக்கியவள். அரேஞ்ச் பண்ணிடலாம் கதிர்.
ஒகே தர்ஷீ தேங்க் யூ.......
சிறு சிரிப்பினை மட்டும் உதிர்த்தாள்.
கொஞ்சம் சீக்கிரம் கிளம்புங்க தர்ஷீ. நாம வாடகைக்கு ஒரு வீடு பார்க்க வேண்டியது இருக்கு. பார்த்துட்டு நம்ம வீட்டுக்கு போலாம்.
வாடகை வீடா யாருக்கு???
நமக்கு தான் தர்ஷீ. வீட்ட ரெனவேட் பண்ணும்போது அந்த வாடகை வீட்டில் எல்லாரும் தங்கிக்கலாம்.
என்ன கதிர் இந்த வீட்டிலேயே எல்லாரும் தங்கலாமே???
அது சரி வராது தர்ஷீ.
ஏன்??..
இங்க ஒருவேளை உங்க சொந்தக்காரங்க வந்துட்டா பிரச்சனை ஆயிடும். அதுவுமில்லாம உங்க அம்மா பார்த்த மாப்பிள்ளை தான் நீங்க அக்கம்பக்கத்துல சொல்லி இருக்கீங்க. எங்க அம்மா வந்துட்டா வாய வச்சுட்டு சும்மா இருக்காது. சோ அதனால ரிஸ்க் ஆயிடும் தர்ஷீ.
ஓ.....
ம்ம்.....
சிறிது நேரம் யோசித்தவள். சூப்பர் ஐடியா கதிர். உங்க ஊருக்கு இரண்டு ஊர் தள்ளி அம்பேத்கர் நகர் இருக்குல்ல. அங்க அப்பா ஒரு வீடு வாங்கி வச்சிருந்தாங்க. இவ்ளோ நாள் வாடகைக்கு இருந்தவுங்க போன மாசம் தான் போனாங்க. நாம எல்லாரும் ஏன் அங்க இருக்கக் கூடாது.
வேணாம்ங்க உங்களுக்கு எதுக்கு சிரமம்.
இதுல என்ன சிரமம் இருக்கு கதிர். நான் முடிவு பண்ணிட்டேன். நாம எல்லாரும் அங்க தான் இருக்க போறோம். உங்களுக்கு ஓகேவா......
அவன் சரி என்பதுபோல் மண்டையை ஆட்டி வைத்தான்.
இருவரும் கிளம்பி கதிரின் வீட்டை நோக்கி பயணித்தனர்.
தொடரும்
Next episode will be published on 9th Mar. This series is updated weekly on Tuesdays.