குழிகள் மட்டுமே இருக்க,
“என்னைக் காப்பாத்துங்க!...என்னைக் காப்பாத்துங்க!” என்று வாய் விட்டுக் கத்த ஆரம்பித்தான் திவாகர்.
அவன் கத்தலை சிறிதும் லட்சியம் செய்யாத அந்த ஆவி, அவன் சட்டையின் நெஞ்சுப் பகுதியைக் கொத்தாய்ப் பற்றித் தூக்க, அவன் கால்களை உதறியபடியே மூன்றடி மேலே போனான்.
நெஞ்சுப் பகுதியில் பிடித்திருந்த பிடி அசுரத்தனமான பிடியாய் இருந்ததால், மூச்சு விடவே திணறினான் அவன்.
அவனைத் தூக்கி அந்தரத்தில் தொங்க வைத்தபடியே சுற்றும் முற்றும் பார்த்த அந்த ஆவி, பவர்ஹவுஸின் இடது மூலையில் ஏகப்பட்ட இரும்பு வயர்களுடன் உயர்ந்து நின்றிருந்த அந்த டிரான்ஸ்ஃபார்மரைப் பார்த்ததும், தன் தலையை மேலும் கீழும் ஆட்டிக் கொண்டே, அவனை இன்னும் கொஞ்சம் தூக்கி அந்த டிரான்ஸ்ஃபார்மர் மீது வீச,
“படீர்” என்ற பெரும் சப்தமும், ஏகப்பட்ட நெருப்புப் பொறிகளும்,
புகையும் அந்த இடத்தைச் சில விநாடிகள் ஆக்கிரமித்துக் கொள்ள,
இரண்டே நிமிடத்தில் கரிக்கட்டையாகிப் போன திவாகர் என்ற ஏமாற்றுப் பேர்வழியின் மரணத்தைக் கண்டு மகிழந்தபடி, புகையோடு புகையாய் கசிந்து வெளியேறியது ஆவி,
****
அதே நேரம், பாக்கியத்தின் வீட்டில், கண்களில் கண்ணீருடன் படுக்கையில் கிடந்தாள் அவள். மனம் அன்று மாலை அம்மாவுடன் நடந்த வாக்குவாததையே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தது.
“அந்த வேலையே ஆகாது!...பொட்டைப்புள்ளயை ராத்திரி நேரத்துல வெளிய தங்க அனுமதிச்சா என்னை விட முட்டாள் இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க!” கத்தினாள் பாக்கியத்தின் தாய்.
”அப்படின்னா...என் மேலே...உன்னோட மகள் மேலே....உனக்கு நம்பிக்கை இல்லை....அப்படித்தானே?” பாக்கியம் கேட்க,
“ஆமாம்டி...எனக்கு எவ மேலேயும் நம்பிக்கை இல்லைடி!...பாத்தா பதவிசா இருப்பாளுக...படார்ன்னு ஒரு நாள் எவன் கூடவாவது ஓடிடுவாளுக!...எனக்குத் தெரியாதா...என்ன?”
“இப்ப...என்னைய அந்தக் கல்யாணத்துக்குப் போக விடுவியா மாட்டியா?”
“விடுவேன்!...நானும் உன் கூடவே வந்து..உன் கூடவே தங்கியிருந்து...உன் கூடவே