இருக்காங்க,அவகல்லாமும் ரெண்டு
,மூணுன்னு கூப்பிடுவாங்க."
"சரி நானும் ஒன்ன, அதே கூப்பிடறேன், இப்போ உனக்கு பாடம் சொல்லித்தறேன்.
அப்பறம் நீ எனக்கு பாட்டு சொல்லித்தா என்ன?" என்றான் அந்த சிறுவன் ...
அந்த பார்க்கில் வழக்கமாக வருபவர்களில் ஒருவர் ஜாபர், அவர் மதியம் சாப்பிட்டவுடன், அந்த பார்க்கில் அரை மணி நடப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த குழந்தைகள் பேச்சைக் கேட்டு திரும்பிப் பார்த்தார். இந்த பையன் தன் மகன் அப்துல் சின்ன வயதில் இருந்த மாதிரியே இருக்கிறானே என்று ஆச்சர்யாப் பட்டார், மனதில் ஒரு வியப்பும் கூடவே ஒரு வலியும் உண்டாக்கியது. அப்போது அந்தப் பையன் பாட தொடங்கினான். அந்தக் குரலில் இனிமை, சுருதி சுத்தமாக பாடினான், அதில் மெய் மறந்து அங்கேயே நின்றிந்தார். அவன் பாடி முடித்தவுடன் அவனருகில் சென்று, "நீ யாருப்பா? ரொம்ப அருமையா பாடறியே!"என்று கேட்டார்.
அப்போது தான் கவனித்தார், அந்த பையன் சொக்காயும்,அரை நிஜாரும் ரொம்ப பழையதாயும், அழுக்காகவும் இருப்பது.
"நான் பாட்டு பாடி பிச்சை எடுக்கிறவன்," என்றான்.அவருக்கு மனதை பிழிந்தெடுத்தது, இவ்வளவு அழகு, நல்ல பாடும் திறமை இருந்தும் இவன் பிச்சை எடுக்கும் நிலைமை, என்று நினைத்து வேதனைப் பட்டார் .
"என்னுடன் வா, உனக்கு நான் சாப்பாடு போட்டு வேலை தருகிறேன்." என்றார் ஜாபர்.
இல்ல, எங்க மாஸ்டர வுட்டு வர மாட்டேன், அவரு எனக்காக காத்திருப்பாரு, அங்க நெறைய பசங்க இருப்பாங்க, எனக்காக காத்திருப்பாங்க, நான் போனாத்தான் அவங்களுக்கெல்லாம் சாப்பாடு, நான் வரமாட்டேன். " என்றான் அந்தச் சிறுவன்.
"உங்க மாஸ்டர் எங்கிருக்காரு நான் வந்து பாக்கறேன்."
"ஐயோ! அது ரொம்ப தூரம், அவருக்கு தெரிஞ்சா என்ன கொன்னுடுவாரு, நீல்லாம் அங்க வராத மாஸ்டரு."
"சரி எப்போ என்ன உதவி வேணுமோ என்ன கேளு.....நான் இந்த நேரத்துல இங்கதான் நடப்பேன், வந்து கேக்கணும் சரியா?" என்றார் ஜாபர்.
ஜாபர், ஒரு திரை இசையமைப்பாளர்,
குறைந்த காலத்தில் புகழ்பெற்று விளங்குகின்றவர். அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு, இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது.
ஒரு வருடம் போல தினமும் அந்தப் பார்க்கில் அவன் பாடும் பாடலைக் கேட்டு ரசிப்பார், அவனுக்கு தினமும் பணம் கொடுப்பார், அவன்