அந்த பள்ளிக்கூடம் வாசலில் போய் நின்றான் .
பிரபு,"என்னடா என்னையா பார்க்க வந்த ? என்ன விஷயம் ?"
"எங்க மாஸ்டர் எறந்துட்டரு, என்ன செய்யறதுன்னு தெரியல, எனக்கு கொஞ்சம் பணம் வேணும்! "
"இறந்துட்டாருன்னா , அப்படின்னா என்ன?"
" அது எனக்கும் தெரியாது , தங்கம்தான் சொல்லிச்சு , மாஸ்டரு எறந்துட்டாருன்னு"
" சரி எவ்வளவு காசு வேணும் ?"
" தெரியல? "
அதை எல்லாம் கொஞ்சம் தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்த ஜாபர் , அவனருகில் வந்து,
"நான் வரேன் உன் கூட , நான் பணம் கொடுக்குறேன், என்னோடு வா!"
" சரி பிரபு, சாரு வறேன்னுட்டாரு. "
அவனை தன் காரிலேயே கூட்டிக் கொண்டு சென்றார்..அங்குள்ள அந்த மாஸ்டர், என்பவனை, அடக்கம் செய்ய வேண்டிய எல்லா உதவியையும் செய்தார்.
பிறகு, அந்த குழந்தைகளை ஒரு பாதுகாப்பான இடத்தில் விட்டு விட்டு , தன் டிரைவரிடம் அவர்களுக்கு சாப்பிட வாங்கி வரச் சொன்னார்.
அதற்குள் தான் அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தார்.
இந்தக் குழந்தைகளுக்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனதில் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டிருந்தார்.
சிட்டியில் அவருக்கு ஒருபழைய வீடு இருக்கிறது, அதை சரி செய்து இப்போது இந்த குழந்தைகளை அங்கே தங்க வைக்கலாம் என்று முடிவு செய்தார்.
தன் மனைவிக்கு போன் செய்து மேலோட்டமாக விஷயத்தை கூறினார். "நிக்கத், நான் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா, கொஞ்சம் சாப்பாடு செய்ஞ்சு அவங்கள கவனிக்க நல்ல ஆள் ஏற்பாடு செய்ஞ்சுடும்மா!" என்று தன் மனைவியிடம் கூறினார்.
"எல்லாம் நான் பார்த்துக்கிறேன்,நீங்க கவலைப் படாதீங்க, உடனேயே வேலையை ஆரம்பிச்சுடறேன்!" என்று கூறியதும், மனதில் நிம்மதி வந்தது.
டிரைவர் சாப்பாடு வாங்கி வந்தவுடன், அதை குழந்தைகளுக்கு கொடுக்கச் சொன்னார், ஜாஃபர்.
அந்த சிறுவனிடம், தனியாக பேசினார், " உன்னை சினிமாவில் பாட வைக்கலாம் என்று நினைக்கிறேன், நீ என்ன சொல்ற?"
"மாஸ்டர், பணம் கிடக்குமா? "
அவன் தலையை அன்புடன் தடவிக் கொடுத்து " கண்டிப்பா உண்டு, உணக்கில்லாத பணமா,சரி