பத்து ரூபாய்க்கு மேல், கொடுத்தாலும் வாங்கமாட்டான், இவன் நிச்சயம் நல்ல குடும்பத்தில் பிறந்த பையனாகத்தான் இருக்க வேண்டும், அவன் அழகு,திறமை, குணம் என்று எல்லாம் அவரை கவர்ந்தது.
ஒரு பழைய கட்டிடத்தில் பின்புறம் இருந்தான் , மாஸ்டர் என்பவன். வயதானவன், நிறைய குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைப்பவன். அன்றன்று பணம் யார் கொண்டு வரவில்லையோ,
அவர்களுக்கு சாப்பாடு கிடையாது, அடியும் கொடுப்பான்.
அந்தப் பையன், தான் பிச்சை எடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு அவர்கள் தங்கியிருந்த பழைய கட்டிடத்தில் பின்புறம் ஓடிச் சென்றான் , அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் சேர்த்து இவன் தான் சம்பாதித்து கொடுத்து அவர்களை காப்பாற்ற வேண்டும்.
அவன் சென்ற போது , அந்த மாஸ்டர் எட்டாம் நம்பர் பையனை அடித்துக் கொண்டிருந்தான்.
"மாஸ்டர் , அவனை எதுக்கு அடிக்கிற?, நான்தான் எல்லாருக்கும் சேர்த்து பணம் தரேனே அவன விட்டுடு ," என்று கத்தினான் அந்த சிறுவன்.
மாஸ்டர், இவன் பேச்சைக் கேட்டு கொஞ்சம் தன் பெல்டால் அடிப்பதை தளர்த்தினான்.
"சரி, என்ன கொண்டு வந்த இன்னிக்கு?" என்று விறைப்பாய் கேட்டு, அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டான்.
"எல்லாருக்கும் பன்னு வாங்கிகிட்டு வாடா!" என்றான் மாஸ்டர்.
சாப்பிட்டுவிட்டு எல்லோரும் நன்றாக தூங்கிவிட்டார்கள். இதுவே இவர்களுடைய தினசரி வாழ்க்கை.
திடீரென்று ஒரு நாள் காலை " மாஸ்டர் ...மாஸ்டர் ...." என்று எழுப்பினான்,
அந்தச் சிறுவன்.
"டேய் என்னடா ஆச்சு மாஸ்டருக்கு ?" என்று இன்னொரு சிறுவன் இவனைக் கேட்க, "தெரிலடா , எவ்வளோ எழுப்பியும் எந்திருக்கல என்னவா இருக்கும் ?"
" தெர்லடா ....?"
"ஏய் பக்கத்துல இருக்குமே தங்கத்தை கூட்டியாடா , என்னென்னு கேப்போம்."
தங்கம் பக்கத்திலிருக்கும் கம்பனி வாட்ச்மான்.
அவன் ஓடிப் போய் கூப்பிட்டு வந்தான்.