"என்னடா என்னாச்சி உன் மாஸ்டருக்கு ?"
"தெரில தங்கம் , அதான் உன்ன கூட்டியற சொன்னேன் , நீ பாத்து சொல்லு. "
"ஐயோ பூட்டுகினான் போலிருக்கே , டாக்டர கூப்பிடு , அவங்கதான் சொல்லணும் ..."
"நீ என்ன சொல்ற , மாஸ்டரு, செத்துட்டாரா? இனிமே வரமாட்டாரா?"
" அப்படித்தான் நெனைக்கேன் , சீக்கிரம் போய் டாக்டர இட்டுவா! "
அந்தச் சிறுவனுக்கு எந்த டாக்டரை கூப்பிடுவது என்று தெரியவில்லை.
அந்த விடியல் காலை தெருக்கள் காலியாக இருந்தது, அந்த சிறுவன் ஓடிக் கொண்டிருந்தான் ஆங்காங்கே ஓரிருவர் நடை பயிற்சிக்காக நடந்துக் கொண்டிருந்தனர்.
அங்கே சென்றுக் கொண்டிருந்த ஒருவரை கூப்பிட்டு, "இங்கே டாக்டரு எங்கே இருக்காரு எங்க மாஸ்டரு எறந்துட்டரு" அந்த சிறுவன் கூறியதைக் கேட்டு ,திகைத்து , " வா , நானும் டாக்டர்தான் , இவ்வளவு சீக்கிரம் யாரும் கிளினுக்குக்கு வரமாட்டாங்க , நானே வரேன் வா! " என்று அந்த சிறுவனைக் கூட்டிக் கொண்டு போனார், அவர்கள் போகும்போதே தன் வீட்டுக்கு சென்று தன்னுடைய கிட்டை எடுத்துக் கொண்டு அவர் தன் காரிலேயே அந்த சிறுவனை மும் கூட்டிக்கொண்டு போனார்.
அவன் டாக்டருடன் வருவதை பார்த்தார்கள், மற்ற குழந்தைகளும் வாட்ச்மேன் தங்கமும்.
"வாங்க டாக்டர் ஐயா , இவன் செத்து கிடக்கான் பாருங்களே!"
டாக்டர் போய், செத்து கிடந்த அந்த ஆளை செக் செய்து, இறந்து விட்டார், விடி காலையில், சுமார் மூணு மணிக்கு இறந்திருப்பார் ... இவர் யாரு, பேரென்ன?"டாக்டர் கேட்டார்.
தங்கம்தான் பதிலளித்தான்.
இவன், இங்க வாச்மன், பேரு பீட்டரு, இந்தக் பசங்கெல்லாம் அனாத, இவன்தான் வளத்துன்றுக்கான் ..."
" சரி, நான் உங்களுக்கு ஒரு லெட்டெர் தரேன் , அதுல, இவர் எப்படி இறந்திருப்பார்னு எழுதியிருக்கும் , அது அவரோட இறுதி கிரியைக்கு தேவைப்படும். " என்று அந்த லெட்டரை கொடுத்தார்.
அந்த சிறுவனிடம், தன்னிடமிருந்த ஐநூறு ரூபாயை எடுத்து திணித்துவிட்டு சென்றார்.
"ஏய் ஒன்னு, இன்னாடா செய்வ, இவன பொதைக்க இந்தப் பணம் பத்தாதே?"
" தெர்ல தங்கம், நான் கொஞ்ச நேரத்துல வரேன் இரு," என்று கூறி, அங்கிருந்து நேரே