அவளுக்கு?"
"வள்ளி ரொம்ப வாயாடத, அவ படிச்சவ அவ நம்ம நல்லதுக்கு தான் சொல்லுவா."
" நீ என்ன திடீர்னு அவளுக்கு சப்போர்ட் செய்யற? இத்தனை வருஷமா எங்களுக்கு கூட தெரியாம மறச்சு வச்ச அவளுக்கு ஒரு குழந்தை பொறந்ததுன்னு, நீ எங்களை இந்த வீட்டு பொண்ணா நினைக்கல, இப்போ அவ வீட்டை எழுதி கொடுன்னா உடனே கொடுக்கறேன்னு முடிவுசெய்ஞ்சுட்ட.?"
"இத பாரு பெரியவங்களுக்கு தெரியும் என்ன செய்யணும்னு அதனால வாயை மூடு."
"ஆமா வள்ளி இப்ப நமக்கு கல்யாணம் ஆகணுமா வேண்டாமா? இப்ப அக்காதான் நமக்கு செய்யனும், நீ என்ன சொல்ற, சட்டு புட்டுன்னு முடிவெடு, அம்மா எனக்கு நீ என்ன செய்ஞ்சாலும் அதுல சம்மதம்மா!" பேச்சை முடித்தாள் பார்வதி .
"நீ ஏண்டி இவ்வளவு கோவப்படற? ரோஷமே இல்லையா உனக்கு?"
அவள் வாயை மூடிக் கொண்டு வெளியே சென்றாள்.... எல்லோரும் ரெடி ஊருக்கு போவதற்கு வள்ளியும் எல்லோரோடையும் ரெடி ஆகினாள்.
"தனம்மா, நீயும் அஜயும் நம்ம கார்ல வந்துடுங்க, அவங்க நாலு பேரும் உங்க கார்ல வரட்டும்!" ஜாஃபர் கூறினார்.
"சரி அங்கிள்!" என்று கூறிவிட்டு, தன் அம்மா அப்பாவிடம் திரும்பி "அம்மா நீங்க நாலு பேரும் எங்க கார்ல வந்துடுங்க, நானும் அஜயும் அங்கிள் ஆண்ட்டி கூட வரோம் . ஒன்னு பின்ன ஒன்னாதான் போவோம் கவலப் படாதீங்க !"
"சரிம்மா!" என்றாள் லக்ஷ்மி.
"செல்வம், கொஞ்சம் வந்து இந்த பாக் எல்லாம் எடுத்து காரில் வச்சுடுங்க!"
அஜய் தன்னோட பாகையும் அவன் அம்மா பாகையும் எடுத்து கொண்டு போனான். நிக்கத்துக்கு சந்தோஷம் அஜய் தங்களோட வரப்போகிறான் என்று தனத்துக்கும் நிக்கத்தை ரொம்ப பிடிக்கும், எல்லா வயதுக்காரர்களோடும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி பேசி அவர்களோடு உறவாடுவார். எப்போதும் சிரித்த முகத்தோடு யாருக்கு உதவி தேவை படுகிறதோ அவர்களுக்கு உதவியாக இருப்பார்.
"செல்வம், நம்ம கார்ல இவங்க எல்லாம் வருவாங்க, என்னோட பிளாட்டுக்கு போகணும், நாங்க அங்கிள் ஆண்டியோட வறோம்!" என்று தனம் டிரைவர் செல்வத்திடம் கூறினாள்.
சென்னைக்கு சென்றவுடன் தன் பிளாட்டிலேயே அவர்களை குடி வைத்தாள் தனம். தனத்தின் அம்மா அப்பா, அவள் தங்கைகள், எல்லோரும் சுத்தி சுத்தி பார்த்தனர். அது ஒரு மூன்று பெட் ரூம் ஃபிளாட், அவர்கள் வீடு ஒரு பெட்ரூம் வீடு பழைய கால வீடு, இங்கு எல்லாவித வசதிகளோடு இந்த ஃபிளாட்டை பார்த்து பூரித்து போனார்கள் ஆனால் வள்ளி மட்டும்