சரிம்மா நான் கிளம்பறேன், நீ பார்த்துக்கோ உனக்கு ஏதாவது வேணும்னா போன் பண்ணு, நான் வரேன். "
"ஏன் தனம் கோவமா, வள்ளிக்கு எப்பவுமே வாய் துடுக்கு நீ கோவிச்சுக்காத"
"என்னை சொன்னதையோ, என் கோவத்தையோ விடு, போற இடத்துல ஒழுங்கா இருந்தா போறும். அவங்க மாமியார் வீட்டில எல்லோரையும் வாழ விட்டா போறும், சரி நான் வரேன்." என்று கூறி விட்டு, விடு விடுவென்று கிளம்பி போனாள் தனம்.
இவளை இறக்கிவிட்டு விட்டு வேலை இருக்கு என்று அஜய் கிளம்பி போய்விட்டான். வீட்டுக்கு போய் தன் காரை அனுப்பிவைத்தான் தன் அம்மாவுக்காக.
அவள் வெளியே வந்தபோது செல்வம் அங்கே இருப்பதை பார்த்து ஆச்சர்ய பட்டாள், " என்ன செல்வம் இங்க இருக்கீங்க, வீட்டுக்கு போல, அஜய் எங்க?"
"மேடம், அஜய் தம்பி வீட்ல இருக்காரு, அவருதான் உங்களை இருந்து கூட்டிட்டு வர சொன்னாரு. அதான் நான் இங்க இருக்கேன், வாங்க மேடம் ஏறிக்குங்க." என்று அவளுக்கு கதவை திறந்து வைத்தான்.
தொடரும்...
Next episode will be published on 19th Apr. This series is updated weekly on Mondays.