எழுந்து வாக் பண்ணிவிட்டு வருவாள். இன்று என்னாச்சு என்னவோ நடந்திருக்கு எதுவானாலும் அம்மாவே சொல்லட்டும் என்று நினைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் போய் இறுக்கத்துடன் உட்கார்ந்தான். சிறிது நேரத்தில் தனம் குளித்து புது புடவையில் மிதமான மேக்கப்பில் வெளியே வந்தாள். அவளுடைய பழைய நடை, உடையில் அவன் மனது கொஞ்சம் லேசாகியது. "ஹை மா யு லுக் க்ரேட்! "
'தேங்க்ஸ் அஜய்? ஐ ரியல்லி பீல் பிரெஷ், சாப்பிடலாமா?"
அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே " ம்.. சாப்பிடலாம்மா!" என்று தட்டை எடுத்து ஒன்றை அவளுக்கு வைத்து விட்டு ஒன்றை தனக்கு வைத்துக் கொண்டான். தனம், தன் பிள்ளைக்கும், தனக்கும் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
"அஜய், இன்னிக்கு , வள்ளியையும்,பாருவையும் பெண் பார்க்க வராங்க, நான் பையன் வீட்டுகாரங்களை போய் இன்னிக்கு பார்க்க போறேன், நிக்கத் ஆண்டிகூட. அப்புறம் அவங்களுக்கு கொஞ்சம் நகையும், புடவைகளும் வாங்கலாம்னு நினைக்கிறேன், நீயும் வரியா எங்க கூட?"
"வாவ் அம்மா, குட், அம்மா நகைக்கும், புடவைக்கும் நான் வந்து என்ன செய்யப்போறேன், நான் வரல நீயும் நிக்கத் பாட்டிம்மாவும் போயிட்டு வாங்க!"
"சரி உன்னோட ப்ரோக்ராம் என்ன?"
"நான் லைப்ரரி போறேன், கொஞ்சம் ரெஃபாரன்ஸ் எடுக்கணும் அதுக்காக போறேன்."
"சரி ஈவினிங் வந்துடறியா?"
"இல்ல மாம் இப்ப நான் வரல, இப்போ நான் வந்து சித்திகளோட கல்யாணத்த காம்ப்ளிகேட் பண்ண விரும்பல."
"அதுவும் சரிதான், மனுஷங்க யார் எப்படின்னு தெரியாது. நீ சொல்றதும் கரெக்ட் தான்!"
அப்போது தனத்தோட போன் ரிங் ஆச்சு, போனை எடுத்து யாரென்று பார்த்தாள், ஜாபரிடமிருந்துதான் "ஹலோ, சொல்லுங்க அங்கிள் எப்படியிருக்கீங்க?"
"நல்லாயிருக்கேன்மா, நாளைக்கு உனக்கும் அஜய்க்கும் ரெக்கார்டிங் இருக்கு, உனக்கு ஒரு ஸோலோவும் இருக்கும்மா, நாளைக்கு பத்து மணிக்கு ரெக்கார்டிங்மா ஒன்பதரைக்கெல்லாம் வந்துடறீங்களா?"
"நான் வந்துடறேன் அங்கிள், நான் அஜய்கிட்ட போனை கொடுக்கறேன் அவன்கிட்ட கேளுங்க அவன் பிரீயான்னு?" போனை அஜயிடம் கொடுத்தாள்.
"ஹலோ!" என்றான் அஜய்.
"ஹலோ, எங் மேன் எப்படியிருக்க?"
"நல்லாயிருக்கேன் மாஸ்டர்! நீங்க எப்படியிருக்கீங்க?"