பசங்கதான் அவங்க ரெண்டு பேரும்."
"அப்படியா?" என்று தனம் அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டாள்.
"நீங்க ஏதாவது கேக்க இருக்கா?"
"ஆமாம்மா, அவங்க என்ன படிச்சிருக்காங்க? எங்க வேல செய்யறாங்க?"
"அவங்க ரெண்டு பேருமே கம்ப்யூட்டர் படிச்சி, அதிலேயே வேல செய்ஞ்சிட்டிருக்காங்க. "
"ஓ, கம்ப்யூட்டர் கம்பெனில வேலை செய்யறாங்களா?"
'ஆமாம்மா!"
"எந்த கம்பெனி?" என்று அவள் கேட்கையில்,
"எங்களுக்கு அவ்வளவா தெரியல, அவங்களே இருக்காங்க, வரச் சொல்றேன் இரும்மா."
"சரிங்க! "
இவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் வந்தார்கள், "நீங்க வாறீங்கன்னு எல்லோரும் வேலைக்கு போகாம உங்களுக்காக காத்திட்டிருக்காங்க. நீங்க இவ்வ்ளவு தூரம் எல்லோரையும் பார்க்க வறீங்களே, அதான்! "
"இல்ல ஆண்ட்டி முறையா உங்கள பார்த்து பேசிட்டு, பொண்ணு பார்க்க வாங்கன்னு கூப்பிட்டு விட்டு போலாம்னுதான் வந்தேன், அப்படியே இவங்க என்ன வேலை செய்யறாங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான்..." என்று இழுத்து நிறுத்தினாள்.
"சாரி ஆண்ட்டி என்னை தப்பா நினைச்சுக்காதீங்க, தங்கச்சிங்க சந்தோஷமா இருப்பாங்கன்னு தெரியும். ஏன்னா, நீங்க பார்த்த வரனாச்சே.
ஆனா தெரிஞ்சுக்கறது நல்லது இல்லையா?" என்று கூறினாள்.
"ஐயோ தனம்மா நான் ஏன் தப்பா நினைக்க போறேன் நீ எது செய்ஞ்சாலும் நல்லதுதான் கவலைப் படாத, நீ என்ன கேக்கணுமோ கேளு. "
அவர்கள் தாங்கள் வேலை செய்யும் கம்பெனி பேரை சொன்னதும், 'ஓ அந்த கம்பெனியா, என்ன சம்பளம் இருக்கும்?" என்று கேட்டுக் கொண்டாள்.
"இப்பதான் மேடம் ஒரு மூணு வருஷமா இந்த கம்பெனியில வேலை செய்யறோம், இப்பதான் சம்பளம் கொஞ்சம் அதிகமாயிருக்கு மேடம்."
"ஓ அப்படியா, கவலப் படாதீங்க படி படியா முன்னேறுவீங்க!" என்று அவர்கள் எந்த லைனில் இருக்காங்க, என்ன ப்ராஜெக்ட் என்று பலவிதமாக கம்பெனி சம்பந்தப் பட்ட எல்லா கேள்விகளையும் கேட்டாள்.
"உங்க பேர சொல்லுங்க!"
"என் பேர் குமரன், எங்க அம்மா கண்ணம்மா, அப்பா கதிரேசன், என் தம்பி செந்தில் அவங்க அம்மா செல்வி , அப்பா தணிகாசலம். அவங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பி, அக்கா