பிறகு அவள் அம்மா கொடுத்த உப்புமாவும் காபியும் சாப்பிட்டு விட்டு நிக்கத்," நான் வீட்டுக்கு போயிட்டு சாயந்தரம் வரேம்மா "என்று கிளம்பி சென்றார்.
ஏன் ஆண்ட்டி இருங்களேன்?"
"இல்லம்மா சாய்ராவும், இம்ரானும் வருவாங்க அவங்கள கவனிச்சுட்டு வந்துடறேன். " என்று நிக்கத் கூறவும்.
"சரி ஆண்ட்டி போயிட்டு வாங்க, அவங்களையும் கூட்டிட்டு வாங்களேன்!"
"இப்ப வேண்டாம்மா, பிறகு ஒரு நாள் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். "
"சரி ஆண்ட்டி!" என்று கூறினாள். நிக்கத் எது செய்தாலும் அது நல்லத்துக்குதான் இருக்கும் என்று அவளுக்கு தெரியும். அதான் அவரை நிர்பந்தம் செய்யவில்லலை.
அவள் தன் அம்மாவை அழைத்து, தன் தங்கைகளையும் கூப்பிடுமாறு கூறினாள். அவர்கள் எல்லோரும் வந்ததும் அவர்களிடம் தான் வாங்கி வந்ததை காட்டினாள், அவர்கள் எல்லோரும் பார்த்துவிட்டு, வள்ளியையும் பார்வதியையும், "நீங்க ரெண்டு பேரும், உங்களுக்கு பிடிச்ச கலரை எடுத்துக்குங்க," என்றாள் தனம்.
"என்னம்மா இப்படி புடவைய வாங்கியிருக்கா, சுமாராத்தான் இருக்கு "என்றாள் வள்ளி.
"அப்ப உனக்கு எதுவும் வேண்டாம் , நானே எல்லா புடவையும் எடுத்துக்கறேன். " என்றாள் பார்வதி.
"அதான, நீதான் காத்துட்டிருக்கியே, எப்படா இவ வேணாம்னு சொல்லுவா நம்ம எல்லாத்தையும் எடுத்துக்கலாம்னு. அவளுக்கு வீட்டு மேல கண்ணு, உனக்கு இந்த புடவை நகை மேல கண்ணு."
"என்ன சொன்ன, எங்களுக்கு எல்லாத்து மேலயும் கண்ணா? சரி அப்படித்தான், உனக்கு எது மேலயும் ஆசை இல்ல விட்டு தள்ளு நாங்களே அனுபவிக்கறோம். "
"அடியே நீ வேற ஏண்டி அவகிட்ட வம்புக்கு போற, அவளுக்கு வாய் அதிகம்னு தெரிஞ்சது தானே!"
"வாய் அதிகம் வாய் அதிகம்னு நீ ஒண்ணுமே சொல்லாம விட்டா அவ இப்படித்தான் இருப்பா, நீ ரெண்டு வாய் மேல போடும்மா, அப்பத்தான் அடங்குவா." என்று பார்வதி, கூறினாள்.
"அவ தான அடங்கிட போறா!!"
"சரி எதுக்கு பேச்சு, உனக்கு என்ன பிடிக்குதோ அத எடுத்துக்கோ பாரு," என்று தனம் கூறினாள்.
"அம்மா இது உனக்கு " என்று அம்மாவுக்கு ஒரு இரட்டை வடம் சங்கிலியும், நான்கு