இப்ப நீ போய் இந்த புடவையை கட்டிண்டு, இந்த நகையை போட்டுக்க போ."
"ஐயோ வேணாம் ஆண்ட்டி இப்ப இதெல்லாம் வேண்டாம் ரொம்ப ரிச்சா இருக்கு. இந்த டிரஸ் இந்த நகை இதெல்லாம் வேண்டாம் ஆண்ட்டி "
"இல்லமா இப்ப இத போட்டுக்க ப்ளீஸ் சொன்னா கேளு இதெல்லாம் ரொம்ப ரிச்செல்லாம் இல்ல, ப்ளீஸ் தனம்? "
அவரின் ஆசையை நிறைவேற்ற அவள் அந்த புடவையை கட்டிக்கொண்டு, அந்த நகையையும் போட்டுக் கொண்டாள். தன்னை கண்ணாடியில் பார்த்த போது அவள் ஒரு தேவதையை போல் மின்னினாள். ஏற்கனவே சாதாரண காட்டன் புடவையிலேயே அவள் தேவதை போல இருப்பாள், இப்போதோ இந்த அருமையான, விலை உயர்ந்த புடவையும் நகையும் அவள் தேவதை போல மின்னுவது அதிசயமே இல்லை. அவள் தன்னை கண்ணாடியில் பார்த்ததும் அவள் அதிர்ந்தாள் 'ஐயோ இந்த பெண்கள் பார்த்தால் அதுவும் வள்ளி வார்த்தையாலேயே தன்னை கொன்று விடுவாள்' என்று மனதுள் நினைத்துக் கொண்டாள். அதை கழட்டி விடலாமென்று நினைத்த நேரம் வாசலில் அவர்கள் எல்லோரும் வரும் சத்தம் கேட்டது, நிக்கத் அவளை பார்க்க அவள் ரூம் கதவை தட்டினார், சத்தம் கேட்டதும் அவள் கதவை திறந்ததும் அவர் அதிர்ந்து போனார், "தனம் எவ்வளவு அழகாயிருக்க தெரியுமா? ஏன் இந்த அழகை பூட்டி பூட்டி வைக்கற? நீ ரொம்ப அழகாயிருக்கம்மா! "
"இதெல்லாம் எதுக்கு ஆண்ட்டி, என் வாழ்க்கை முடிஞ்சுடுத்து ஆண்ட்டி எனக்கெதுக்கு இந்த அழகு," விரக்தியோடு கூறினாள் தனம்.
"என்ன தனம்மா நீயா இப்படியெல்லாம் பேசறது? வாழ்க்கை உனக்கு இனிதான் ஆரம்பிக்கனும், இப்ப போய் இப்படியெல்லாம் பேசற என்னடாயிது?"
அவள் கண் கசிந்தது, பெரு மூச்செடுத்து அதை அடக்கினாள். தன் தங்கைகளுக்கு நல்லது நடக்கும் இந்த வேளையில் அவள் வருத்தப் படக் கூடாது என்று, "ஒன்றுமில்லை ஆண்ட்டி எனக்கு என்னவோ அஜய் தான் இனி வாழ்க்கையில் எல்லாம், அதனால நான் இனி இந்த மாதிரியெல்லாம் டிரெஸ் யாருக்காக செய்யணும், இன்னிக்கு நீங்க கேட்டதால உங்க ஆசைக்காக தான் நான் இந்த டிரெஸ் செய்திருக்கேன். ஆண்ட்டி இனி இந்த மாதிரி ஃபோர்ஸ் பண்ணாதீங்க ஆண்ட்டி ப்ளீஸ்.."
"ப்ளீஸ் எல்லாம் எதுக்கு, இன்னிக்கு எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?"
"இந்த அழகை பார்க்கணும்னு எவ்வளவு நாள் காத்துக்கிருந்தேன், இப்ப பாரு ஒரு தேவதையா இருக்க, நீ. என்கண்ணே பட்டுடும் போல இருக்கு!"