தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 07 - விஜேஜி
வீட்டிற்கு சென்றவுடன் தனம் அஜயை பார்க்க சென்றாள். அவன் ஏதோ வேலையாய் இருந்ததால் அவனை டிஸ்டர்ப் செய்யாமல் தன் ரூமுக்குப் சென்றாள்., அங்கே அவள் தன்னை மறந்து வாய் விட்டு அழுதாள், தன் அவல நிலையை நினைத்து அழுதாள். 'கடவுளே நான் ஏன் இன்னும் வாழனும்? '
அழுதாள் அழுதாள்
"செல்வண்ணா அம்மாவை கூட்டிட்டு வரல?" ரொம்ப நேரமாச்கிவிட்டது என்று செல்வத்தை போனில் கூப்பிட்டு கேட்டான், அஜய்.
"தம்பி எப்பவோ வீட்ல விட்டுட்டேனே நீங்க அவங்கள பாக்கல?"
"அப்படியா, நான் கொஞ்சம் பிசியா இருந்தேன் அண்ணா. நான் அவங்க ரூம்ல பாக்கறேன், தாங்க்ஸ் ண்ணா, " என்று போனை வைத்து விட்டு தனத்தின் ரூமுக்கு சென்றான் .
கதவை தட்டினான், கதவு திறக்கவில்லை. அவனே கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றான் அங்கே தன் அம்மா அழுத்துக் கொண்டே சுருண்டு படுத்துக் கொண்டிருந்தாள், அதை பார்த்த அவனுக்கு மனது பிழிந்தெடுத்தது, அம்மாவை தட்டி " அம்மா, அம்மா .... என்ன ஆச்சும்மா, என்ன ஆச்சும்மா, ஏன் அழற?"
அவள் அதிர்ந்து எழுந்தாள் "ஒண்ணுமில்ல அஜய், ஒண்ணுமில்ல!" என்று வேறு பக்கமாக திரும்பி தன் முகத்தை துடைத்துக் கொண்டாள்.
"என்னம்மா மறைச்சு துடைச்சுண்டா எனக்கு ஒன்னும் தெரியாதா என்ன? என்ன ஆச்சும்மா சொல்றியா இல்லையா, ஏன் அழற?"
"அழல்லாம் இல்ல அஜய் நான் உன் ரூமுக்கு வந்தேன், நீ பிசியா ஏதோ வேலை பண்ணிண்டிருந்த, அதனால வந்து படுத்தேன் தூங்கிட்டேன் அப்படியே, அவ்வளவுதான். "
"சரி நீ என்னவோ உண்மையை சொல்ல போறதில்ல , சரி வா சாப்பிட்டியா இல்லையா?"
"நான் சாப்டுட்டேன் அஜய், நீ சாப்டியா?"
"இல்லம்மா உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன், பரவாயில்ல இப்போ பசி இல்ல விடு."
"ஏய்... இந்த கதையெல்லாம் வேண்டாம் வா சாப்பிட!"
"இல்லம்மா வேண்டாம், பசியில்லை வேண்டாம்! “
"ஏன் அஜய் அம்மா சொன்னா கேக்க மாட்டியா?"
"ஏம்மா இப்படியெல்லாம் பேசற, நீ பசியோட இருப்பியேன்னுதான் சாப்பிடலாம்னு கூட்டேன், எனக்கு பசியெல்லாம் இல்ல!"
"சரி வா எனக்கு பசிக்குது சாப்பிடலாம், நீ சாப்பிட வரலேன்னா எனக்கும் வேண்டாம். ஆனா