"ஹ்ம்ம் நன்னாயிருக்கேன், நாளைக்கு ஒரு ரெக்கார்டிங் இருக்கு தனத்தோட, பத்து மணிக்கு உனக்கு எப்படி பிரீ தானே? "
"நாளைக்கு காலேஜ்ல ஒரு ப்ரெசென்ட்டேஷன,, அதனால கொஞ்சம் சீக்கிரம் முடுச்சுட்டா பரவாயில்ல மாஸ்டர், அது ஒரு இம்பார்ட்டண்ட் ப்ரெசென்ட்டேஷன் அதான்! "
"ஓ அப்படின்னா ஒன்பது மணிக்கு வச்சுடலாம், தனத்துக்கிட்ட சொல்லிடு, எட்டரைக்கெல்லாம்
வந்துடுங்க, ஒரு ரிஹர்ஸ் பண்ணிட்டு பிறகு டேக்க்குக்கு போயிடலாம்."
"சரிங்க மாஸ்டர் !"
"பை அஜய் !"
போனை தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு, விஷயத்தை விளக்கினான், இருவரும் சாப்பிட்டு முடித்தனர், தனம் நிக்கத்துக்கு போன் செய்து விஷயத்தை கூறினாள்.
"அவ்வளவுதான தனம் நாம போலாம், இன்னிக்கு மதியம் வரை நல்லா ஷாப்பிங் எல்லாம் பண்ணலாம் ரெண்டு பேரும்."
"சரி ஆன்டி!"
"நான் இப்போ இன்னும் ஒரு அரை மணியில் அங்கு வந்துடறேன்."
"சரி ஆன்டி உங்களுக்காக வெயிட் பண்றேன். "
போனை வைத்து விட்டு, தன் ரூமுக்கு போய் பீரோவிலிருந்து பணம் எடுத்துக் கொண்டாள், அஜய் டிரெஸ் மாற்றிக் கொண்டு வெளியே வந்தான் ."அம்மா நான் கிளம்பறேன், நீங்க எல்லா வேலையும் முடிச்சுட்டு வாம்மா, நைட் பார்க்கலாம், நைட் வந்துடுவ இல்ல ?"
"கண்டிப்பா வந்துடுவேன், உன்ன பார்க்காம நான் எப்படி இருப்பேன்?"
"சரி ஈவினிங் பார்க்கலாம்!" என்று கிளம்பிவிட்டான், சிறிது நேரத்திலெல்லாம் நிக்கத் வந்ததும், தனமும் கிளம்பிவிட்டாள்.
"வா தனம்மா, நான் அவங்ககிட்ட பேசிட்டேன் அவங்க இப்ப காலையிலேயே வரச் சொன்னாங்க அதனால முதல்ல அங்க போயிடலாம், தனம்."
"சரி ஆண்ட்டி!"
அவர்கள் சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள், அவர்கள் வெளியே வந்து வரவேற்றார்கள். "வாங்க நிக்கத் அக்கா, எங்க நீங்க வராம போயிடுவீங்களோன்னு நினச்சேன், வாங்க!"
"இவங்கதாம்மா தனம், இவங்க தங்கச்சிகத்தான் கல்யாணத்துக்கு நான் சொன்னது, உங்கள முறையா பார்க்கணும்னு சொன்னாங்க அதான் கூட்டிட்டு வந்தேன்!"
"வணக்கம்மா! என் பேர் கண்ணம்மா, இவ என் தங்கச்சி பேரு செல்வி, எங்க ரெண்டு பேரோட