நன்றாக இருந்தது.
"பியூடிபியுல் ஷார்ட்ஸ்! "என்றாள் தனம்.
"தேங்க்ஸ் மா! "என்றான், அஜய். புன்னகையுடன், இப்படி ஒரு பையன் என் வயத்தில் பிறக்க என்ன புண்ணியம் செய்திருக்கேன் நான், என்று நினைத்துக் கொண்டாள், தனம்.
வெளியே வந்து தட்டில் இரண்டு ஷர்ட்டையும் வைத்து அம்மா அப்பாவிடம் ரெண்டு மாப்பிள்ளைக்கும் கொடுக்க சொன்னாள்.
கேள்வியோடு பார்த்த அப்பாவை "அஜய் வாங்கிண்டு வ்நதான்பா அதான்!" என்று யார் காதிலும் விழாதவாறு கூறினாள்.
அவர்களுக்கு கொடுத்த போது, "என்ன அவசரம் சிஸ்டர், அஜய் தனக்குன்னு வாங்கினது எங்களுக்கு எதுக்கு சிஸ்டர்? "
"இல்ல குமரன், எனக்கு கஷ்டமாயிருந்தது பங்க்ஷன் செய்து நாங்க ஒண்ணுமே கொடுக்கலியே, உங்களுக்குன்னு. "
"நாங்க கூட ஒன்னும் கொடுக்கல, அதுக்கென்ன?"
செல்வியும் கண்ணம்மாவும் தங்கள் கையில் இருந்த மோதிரத்தை கழட்டி கொடுத்தனர் , வள்ளிக்கும், பார்வதிக்கும் போட சொல்லி
குமரனும், செந்திலும் அவர்கள் இருவருக்கும் போட்டுவிட்டனர், எல்லோரும் சந்தோஷத்தோடு அங்கிருந்து கிளம்பினர்.
"சரி நாங்களும் கிளம்பறோம் நாளைக்கு சீக்கிரமே ரெக்கார்டிங் இருக்கு, கிளம்பறோம்மா!"
"அப்படியா சரி! " என்றார் லட்சுமி.
"இருவரும் கிளம்பி போனார்கள், "அம்மா நாளைக்கு எனக்கு ஒரு ப்ரெசன்ட்டேஷன் இருக்கு அதனால சீக்கிரமே காலேஜுக்கு போயிடுவேன், மாஸ்டர்கிட்ட என்னோட செஷன் முன்னாடியே வச்சுட சொல்லணும், உனக்கு ஒன்னும் ப்ராப்லம் இல்லியே?"
"இல்ல அஜய் எனக்கு ஒரு ப்ராபளமும் இல்ல."
வீட்டுக்கு சென்று இருவரும் தங்கள் ரூமுக்கு சென்றனர்.
தொடரும்...
Next episode will be published on 26th Apr. This series is updated weekly on Mondays.