சொல்ற தனம்?"
அதற்குள் வள்ளிதான் இடை புகுந்தாள்.
"அதான் ரெண்டு குடும்பமும் முடிவு பண்ணிட்டா போறும்ன்னு சொல்லியாச்சு இல்ல, பிறகு என்ன, அம்மா நீ முடிவு பண்ணும்மா." வெடுக்கென்று கூறினாள் வள்ளி. இதை கேட்ட கண்ணம்மா குடும்பம் அதிர்ச்சியாகிவிட்டது, என்ன இந்த பெண் தன் கூட பிறந்தவளை இப்படி பேசுகிறது என்று நினைத்தார்கள்.
"ஏம்மா வள்ளி இப்படி பேசற, உன் அக்கா உங்களுக்காக எவ்வளவு பண்ணறா, இப்படியெல்லாம் பேசலாமா?" என்று கண்ணம்மா கூறினார்.
"அதெல்லாம் வேஷம் அத்தை!" என்றாள் வள்ளி.
நிக்கத்துக்கு வேதனையாக இருந்தது இந்தப் பெண் இப்படி தனத்தை பேசிவிட்டாளே, அல்லா இந்த பெண்ணை மன்னிச்சுடுங்க என்று வேண்டிக் கொண்டார்.
"ஏம்மா வள்ளி உங்க அக்காவை இப்படி பேசிட்டியே?"
என்று கூறுகையில் லக்ஷ்மிக்கு கோவம். என்ன இது சம்பந்தி வீட்டுக்காரங்க என்ன நினைப்பாங்க இந்த பெண்ணை பத்தி என்று நினைத்து,
"என்ன பேசற வள்ளி வாயை மூடு!" என்றார் லட்சுமி .
அதோடு வாயை மூடிக் கொண்டாள் வள்ளி. பார்வதி ஒரு முறை முறைத்தாள், வள்ளியை பார்த்து.
கண்ணம்மா தான் மறுபடியும் "இத பாரு வள்ளி, நீ வந்து இருக்கப் போறது கூட்டு குடும்பம், இந்த மாதிரி எடுத்தேன், கவுத்தேன்னு பேசிக் கூடாது புரிஞ்சுதா!"
"இல்ல ஆண்ட்டி, அவ என் கிட்டதான் இப்படி மத்தபடி உங்க வீட்ல வந்து அப்படிலாம் இருக்கமாட்டா கவல படாதீங்க! "
"இத பாரு நீ விட்டு கொடுக்காம பேசற அவ எப்படி பேசிட்டா என்ன இருந்தாலும் நாங்க அசல் மனுஷங்க எங்க எதிர்ல இப்படி பேசினா எப்படிம்மா இந்த பொண்ணை நம்பறது, எங்களது கூட்டு குடும்பம். இந்த பொண்ணு நாளைக்கு எங்க குடும்பத்துல வெளி மனுஷங்க எதிர்ல இப்படி எங்க வீட்டு ஆளுங்கள பேசினா என்ன பண்றது, சொல்லு?"
"இல்ல ஆண்ட்டி அப்படில்லாம் நடக்காது அதுக்கு நான் கியாரண்டி கவலப் படாதீங்க."
"சரி நீ சொல்ற அதனால நம்பறேன், சரி இப்ப தட்ட மாத்திக்கலாம் பிறகு நீ கல்யாண நாள் முடிவு செய்ஞ்சுட்டு சொல்லு, மிச்சத்தை அப்புறம் பேசிக்கலாம் என்ன சொல்ற?"
நிக்கத்தை நிமிர்ந்து பார்த்தாள் தனம், அவரும் சரி என்று தலை ஆட்டினார். தனம், தன் அம்மா அப்பாவை பார்த்தாள். அவர்களும், "என்ன தனம் பார்க்கற, இன்னிக்கு நல்ல நாள்தாம்மா நீ சரின்னு சொல்லு."