இரண்டு தங்கைகளும் ரெடியாகி வெளியே வந்தனர், வள்ளி தான் வாங்கி கொடுத்த புடவையை கட்டிக் கொண்டிருந்தாள் அவளுக்கு அந்த நீல கலர் புடவை பொருத்தமாகவே இருந்தது, பார்வதிக்கும் தான் வாங்கியிருந்த பச்சை கலர் புடவை நன்றாக இருந்தது, பார்வதி அவளருகில் வந்து,
" அக்கா நான் எப்படியிருக்கேன்? எனக்கு இந்த புடவை நல்லாயிருக்கா?"
"ரெண்டு பேருமே நன்னாயிருக்கீங்க!"
"தனம் நீயும் புடவை மாத்திக்கிறது தான, நீ வாங்கி வந்திருக்கிற புடவைல ஒன்னு எடுத்து உடுத்திக்க!"
"இல்லம்மா வேண்டாம் எனக்கு இதுவே போதும்."
"ஏன் தனம்?"
"இல்ல எனக்கு இதுதான் பிடிக்கும் பொண்ணு பார்க்க வறவங்க தங்கச்சிங்களதானே பார்க்க வராங்க, அதனால எனக்கு இதுவே போதும். "
" சொன்னா கேக்க மாட்டேன்ற, சரி எல்லாம் வந்துடுத்தா?"
" டிபன் ஆர்டர் கொடுத்தது இன்னும் வரல, வந்துடும் கவலப் படாத!"
"சரி தனம்!" என்றார், அவள் அம்மா.
சிறிது நேரத்தில் டிபன் ஆர்டர் வந்துவிட்டது, எல்லாவற்றையும் வாங்கி வைத்து பணத்தை கொடுத்து அனுப்பினாள்.
அப்போது நிக்கத் வந்தார் "ஆண்ட்டி வாங்க இன்னும் வரலைன்னு நினைச்சேன், வந்துட்டீங்க. "
"நான் வராம என்னம்மா. கண்ணம்மா வீட்ல எல்லாரும் கிளம்பிட்டாங்களாம், வந்துடுவாங்க இப்ப."
"சரிங்க ஆண்ட்டி எல்லாரும் ரெடிதான்."
"அதெப்படி எல்லாரும் ரெடின்ற, இன்னும் நீ ரெடியாகல?"
"இல்ல வேண்டாம் ஆண்ட்டி எனக்கெதுக்கு?"
"இல்லடா யாருக்காக நீ இப்படி ஒரு வாழ்க்கை, நீ நல்லா வாழனும் தங்கம், இந்த ஆன்டியை நீ மதிக்கறதா இருந்தா, இந்தா, இதை கட்டிண்டு இந்த நகையை போட்டுண்டு வா, இது நீ எனக்காக கண்டிப்பா போட்டுக்கணும்? செய்வியா?"
"கண்டிப்பா உங்க ஆசையை பூர்த்தி செய்வேன் ஆனா இத இன்னொரு நாள் போட்டுக்கறேன் இது தங்கச்சிங்கள பொண்ணு பார்க்க வர நாள் ஆண்ட்டி எனக்கெதுக்கு இதெல்லாம்?"
"இல்ல தனம், உன்ன ஏற்கனவே அவங்கள்லாம் பார்த்திருக்காங்க அதனால கவலைப் படாதே ,