ஆட்டிவிட்டு, "எங்களுக்கும் பிடிச்சிருக்கு நீங்க எல்லாரும் நல்ல மாதிரியா இருக்கீங்க, என்ன சொல்றீங்க?" என்று தன் கணவரிடம் கேட்டார்.
"ஆமாம் லட்சுமி சொல்றது சரிதான், எங்களுக்கு உங்க எல்லாரையும் பிடிச்சிருக்கு மேல்கொண்டு நீங்கதான் என்ன செய்யணும்னு சொல்லனும்." கதிரேசனை பார்த்து கேட்டார்.
"மேல்கொண்டு ...." தன் மனைவியை பார்த்தார் கதிரேசன், தன் வீட்டில் எப்பவும் எல்லாவற்றையும் முடிவு செய்வது கண்ணம்மா தான் அதனால் அவரை பார்த்தார் கதிரேசன் .
"மேல்கொண்டு சீக்கிரமே கல்யாணத்த வச்சிருங்க, பிறகு பையன்களுக்கு தலா இருபதாயிரம் கொடுத்துடுங்க, நகை எவ்வளவு போடுவீங்க?"
லட்சுமி தனத்தை பார்க்கவும், கண்ணம்மா புரிந்து கொண்டார், தனம்தான் முடிவெடுப்பவள் என்று..
"நீயே சொல்லு தனம், " அவளை பார்க்கவும், தனம் நிக்கத்தை பார்த்தாள்.
நிக்கத் நடுவில் புகுந்தார், "என்ன கண்ணம்மா நீங்க கையில காலுலன்னு கேக்கறீங்க?"
அக்கா உங்களுக்கு நான் சொல்லனுமா உங்களுக்கே தெரியாதா, உங்க மதத்திலயும் இதெல்லாம் உண்டுதானே!"
"எங்க மதத்துல நாங்க பொண்ணுக்கு கொடுப்போம், நீங்க என்ன கொடுப்பீங்க பொண்ணுக்கு?"
"அதான் நிக்கத் அக்கா உங்க மதத்துல பொண்ணுக்கு கொடுப்பீங்க எங்க மதத்துல பையனுக்கு கொடுப்பாங்க அவ்வளவுதான் எது முறையோ அதைத்தான் நாங்க கேக்கறோம். "
"ஆண்ட்டி, என் தங்கைகளுக்கு பதினைந்து சவரன் நகை கொடுப்போம், உங்க மகன்களுக்கு செயின், மோதிரம் போடுவோம் , பிறகு கல்யாணம் நல்லா செய்துவைப்போம். "
"ஏம்மா அவங்களுக்கு ஸ்டீல் பாத்தரம், பீரோ கட்டில், மிக்ஸீ கிரைண்டர் இதெல்லாம் வாங்கி கொடுக்க மாட்டீங்களா?"
"அவங்க தனியா இருக்க போறாங்களா ஆண்ட்டி?"
"ஏம்மா நீயே தனியா போக சொல்லிடுவ போலிருக்கே ?"
"நான் சொல்லல ஆண்ட்டி. நீங்கதான் எல்லாம் வாங்கி தருவீங்களான்னு கேட்டீங்களே, அவங்க உங்களோடுதான இருக்க போறாங்க அப்ப எதுக்கு அதல்லாம்? உங்க வீட்லதான் எல்லாம் இருக்கே ஏற்கனவே... "
"இல்ல உங்க வீட்டு பொண்ணுங்க எல்லாம் புதுசா இருந்தா கஷ்டப் படாம வேலை பார்ப்பாங்க இல்லியா அதான் கேட்டேன் "
"எப்படியும் புதுசா வாங்கி கொடுத்தாலும் இன்னும் கொஞ்ச நாள்ல பழசாயிடும் அப்புறம் எப்படியும் பழசுலத்தான் வேலை செய்யணும், அதனால இப்பவே பழசுல வேலை செய்ய பழகட்டும்."