சூடு போட்டுக்கனும் கண்ணம்மா, நாம நாமா இருப்போமே."
கண்ணம்மாவுக்கு புரிந்துவிட்டது, இனி தான் ஏதாவது பேசினால் தனக்கு அவமானம்தான் மிஞ்சும்.
"இல்ல அக்கா எதோ கேட்டேன் அவ்வளவுதான், எங்க வீட்டுக்கு வர மருமகள்களை அவமரியாதை செய்யணும்னெல்லாம் இல்ல, தப்பா நினைக்காத தனம். "
"ஐயோ இல்ல ஆண்ட்டி தப்பா நினைக்கல, என்ன பெண்களுக்கு இந்த மாதிரி வரதட்சனைன்னு அவங்கள வச்சு கல்யாணத்த வியாபாரமா ஆக்கறததுக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன் ஆண்ட்டி, டீவீல்ல ,சீரியலை பார்த்து அழற பொம்பளைங்க, ஏன் தங்க வீட்டு மருமகளை தங்க மகள்களா நினைக்க கூடாது சொல்லுங்க? ப்ளீஸ் ஆண்ட்டி நீங்க எங்க தங்கைகளை உங்க வீட்டு பெண்களா நடத்துவீங்கன்னு நம்பறேன்."
"எங்க மேல சந்தேகமா தனம்? நீ எங்க வீட்டுக்கு வந்துருக்கியே உனக்கு இன்னுமா நம்பிக்கை வரல?"
"அதெல்லாம் இல்ல ஆண்ட்டி நம்பிக்கையெல்லாம் இருக்கு அதான் சொன்னேனே பெண்களா நடத்துவீங்கன்னு நம்பறேன்னு, இனி ஆகவேண்டியத பேசலாம் ஆண்ட்டி."
"சரி தனம் சொல்லும்மா?"
நாளைக்கே ஒரு ஐயரை வைத்து நாள் பார்த்து நிச்சயத்துக்கு நாள் குறிச்சுட்டு வரேன்,ஆண்ட்டி ."
"இன்னிக்கே நாள் நல்லா இருக்கு தனம் , தாம்பூல தட்டு மாத்திக்கலாம் என்ன சொல்ற செல்வி?" என்று தன் தங்கையிடம் கேட்டார் கண்ணம்மா.
செல்வியோ தன் கணவனை பார்த்தாள், அண்ணன் தம்பி இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்வையாலேயே பேசி சரி என்றனர், செல்வியின் கணவன் பார்வையாலேயே சரி என்றார்.
"சரிக்கா நீ சொல்ற மாதிரியே செய்ஞ்சுடுவோம். "என்றாள் செல்வி.
வள்ளி, பார்வதி என்ன சொல்றீங்க, உங்களுக்கும் இதுல சம்மதம்தானே ?" என்று கேட்டார் லட்சுமி. தனம் அவள் அம்மாவிடம் மெதுவாக பேசி தங்கைகளிடம் கேளு அவர்களுக்கும் இதில் சம்மதமா என்று "என்று கூறி இருந்தாள்.
அதனால், அவள் அம்மா அவர்களிடம் கேட்டார் .
இருவரும் தலை ஆட்டினர் தங்களுக்கு பிடித்திருக்கிறது, என்று தெரிவிக்கும் வகையில் .
சரி என் பொண்ணுங்களுக்கு பிடிச்சிருக்கு, இன்னிக்கே நாள் நல்லாயிருக்கு சம்பந்தி சொன்ன மாதிரி இன்னிக்கே தட்ட மாத்திக்கலாம் என்ன சொல்றீங்க ?" என்று நிக்கத்தை பார்த்து கேட்டார் லட்சுமி.
"அம்மா நீங்க ரெண்டு குடும்பமும் முடிவு பண்ணிட்டா பிறகு யார் என்ன சொல்ல, நீ என்ன