(Reading time: 35 - 69 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

வள்ளிக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது.

குமரன் ஜாடையில் வாயை மூடச் சொன்னான் தன் அம்மாவிடம்

அவருக்கு தன் மகன் மீது கோவம் வந்தது.

ஆனாலும் அவர் ஒன்றும் கேட்க முடியாத நிலையில் இருந்தார், "அப்ப ஸ்கூட்டர் வாங்கி கொடுத்துடுங்க, " என்று விடாமல் கேட்கவும்.

"இத பாருங்க ஆண்ட்டி, இதெல்லாம் அவங்க அவங்க வேலை செய்து வாங்கி கொள்ள வேண்டியதுதான். நாங்க உங்க வீட்டுக்கு மருமகளாக எங்க வீட்டு பொண்ணுங்களை அனுப்பறோம், அவங்க மூலமாக உங்க வம்சம் தழைக்கும். அவங்க உங்க வீட்டு குலவிளக்கும்மா, உங்க மகன்கள வச்சு கல்யாணத்த வியாபாரமாக்காதீங்க, அவங்கள சுயமரியாதையோடு இருக்க வையுங்க. "

குமரன் இடைமறித்து "சாரிங்க எங்க அம்மா இன்னும் அந்த காலத்த மாதிரியே பேசறாங்க, அதனால தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க சொன்ன மாதிரி நாங்களா எங்களுக்கு வேண்டியதை வாங்கிப்போம், எங்க மனைவிக்கும் வாங்கி கொடுப்போம்ங்க. எங்களுக்கு உங்க தங்கச்சிய பிடிச்சிருக்கு, இதுக்கு மேல நீங்க கல்யாணத்துக்கு என்ன செய்யறீங்களோ அது உங்க இஷ்டம், என்னடா செந்தில் நீ என்ன சொல்ற? "

 "நான் சொல்றதுக்கு என்ன , எனக்கும் அவங்கள பிடிச்சிருக்கு நீங்க என்ன செய்யறீங்களோ உங்க தங்கச்சிக்கு செய்யுங்க அவ்வளவுதான். "

"அம்மா உங்களுக்கும் சம்மதம்தானே?" என்று குமரன் அவன் அம்மாவை நோக்கி கேட்டான், ஒரு அர்த்தமுள்ள பார்வையுடன். அதே பார்வையுடன் தன் அப்பாவையும் பார்த்தான்.

கதிரேசன், தொண்டையை கணைத்துக் கொண்டு, "இத பாருங்க எங்க எல்லோருக்கும் இந்த பெண்களை பிடிச்சிருக்கு. எங்க வீட்டு மருமகள்களா வரப்போறாங்க, எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். எங்க பசங்களுக்கு பிடிச்சிருக்கு இத விட எங்களுக்கு என்ன வேண்டும்? கூடிய சீக்கிரம் நிச்சயத்துக்கு நல்ல நாளா பாருங்க."

அதுவரை எதுவும் பேசாத நிக்கத் அப்போது பேசினார்,"என்ன கண்ணம்மா நான் எதுவும் பேசாதிருந்த காரணம் நீங்க சம்பந்தம் பேசிக்க போறவங்க, நாம தலையிடக் கூடாதுன்னுதான். உனக்கு சம்மதம்னு சொல்லும்மா அப்பத்தான் இந்த பொண்ணுங்க உங்க வீட்டுக்கு வந்து நிம்மதியா இருப்பாங்க. நாம கூட பெண்கள்தாம்மா, நாமே நம்ம பெண்ணினத்தை விட்டு கொடுக்கலாமா, சொல்லு கண்ணம்மா? நம்ம மொதல்ல நம்ம வீட்டுக்கு வர பொண்ணுங்களுக்கு மரியாதை கொடுக்கணும், தனம் சொல்ற மாதிரி அவங்க உங்க வம்சம் தழைக்க போறவங்க,  அதனால மனசுல எதையும் வச்சுக்காத மத்தவங்கள பார்த்து நாம ஏன்

3 comments

  • Nice episode ma'am :hatsoff: . Nichayathaartham Nalla padiyaa mudinchu.marriage ku Idaiyila yaarum (mukiyama valli) problem pannama iruntha seri. Waiting for next episode ma'am :-) .
  • wow 21 pages :dance: :dance: :dance: heyyyyyyyy :-) nice epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.