அவள் கொஞ்சம் வெட்கப் பட்டுக் கொண்டு, "அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆண்ட்டி, உங்க கண் நல்ல கண் எப்படியும் அது நல்ல கண்ணா தான் படும்"
இரண்டு பேரும் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார்கள் அப்போது கண்ணம்மா பேமிலி உள்ளே நுழைந்தார்கள், "வாங்க வாங்க! "என்று தனமும், நிக்கத்தும் எல்லோரையும் வரவேற்றார்கள்.
அவர்கள் எல்லோரும் உள்ளே வந்தவுடன் பெண்கள்ளெல்லாம் கீழே உட்கார்ந்தார்கள் ஆண்கள் எல்லாம் மேலே சோபாவில் உட்கார்ந்தாள் , தன் அப்பா அம்மாவை எல்லோருக்கும் அறிமுகப் படுத்தினாள், தனம். ஒருவருக்கொருவர் அறிமுகப் படலம் முடிந்தது.
பொதுவாக பேசினார்கள், பிறகு, " பெண்ணை பார்க்கலாமா?" என்றார், கண்ணம்மா.
"கண்டிப்பா பார்க்கலாம், இதோ வர சொல்றேன்." என்றார் வேணுகோபால்
"தனம் கூட்டிட்டு வாம்மா!"
"சரிப்பா!" உள்ளே போனாள், வள்ளி இவளை பார்த்தவுடன் பொறாமையில் இவளை எரிப்பது போல் பார்த்தாள். தனம் கண்டு கொள்ளவில்லை, "வாங்க ரெண்டு பேரும்! " அவர்களை கூப்பிட்டாள்
இருவரும் அவளின் பின்னேயே சென்றார்கள். " வாங்கம்மா, இங்க வாங்க! " கண்ணம்மாதான் அழைத்தாள் தன்னருகில்.
தனத்தின் அம்மா " இவள் வள்ளி, இவள் பார்வதி, உங்களுக்கு ஏற்கனவே தெரியும் தனம் மூத்தவள், இரண்டாவது வள்ளி, மூன்றாவது பார்வதி, "என்று ஒவ்வொருவரையும் கை காட்டி அறிமுகப்படுத்தினார்.
குமரனுக்கு வள்ளியையும், செந்திலுக்கு பார்வதி என்று அவர்கள் வயதினை கருதி முடிவு செய்தனர், ஒருவருக்கொருவர் பார்த்து அவர்கள் இருவருக்கும் பிடித்துவிட்டது, கண்ணம்மாதான் "என்னடா குமரா, செந்திலு பொண்ணு பிடிச்சிருக்கா சொல்லுங்க ?"
ரெண்டு பேரும் தலையசைத்தனர் தங்களுக்கு பிடித்தது என்று, அதை பார்த்த கண்ணம்மாவும் செல்வியும் மகிழ்ந்தனர். அவர்கள் கணவர்கள், ஜாடையில் தெரிவித்தனர்.
"நிக்கத் அக்கா, தனம் எங்க எல்லோருக்கும் பொண்ணுங்கள பிடிச்சிருக்கு , அம்மா வள்ளி, பார்வதி உங்களுக்கு என் மகன்கள பிடிச்சிருக்கா?" கேட்டார் கண்ணம்மா .
லட்சுமி சந்தோஷமாக தன் மகள்களை பார்த்தார், வேணுகோபாலும் தன் மகள்களை பார்த்தார். அவர்கள் ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு வள்ளியும் பார்வதியும் பார்த்துக் கொண்டு கண்களால் ஜாடை பேசி' சரி' என்று தலை ஆட்டினார்கள்.
தனத்துக்கு அவர்கள் சரி என்றதும் அம்மாவை பார்த்தாள், அவர் தனத்திடம் சரி என்று தலை