தனம் கண்ணம்மாவை நோக்கி "ஆமாம் ஆண்ட்டி இவன் என் பிள்ளை அஜய்!"
"ஓ உனக்கு இவ்வளவு பெரிய மகனா எனக்கு தெரியாதே?"
"ரொம்ப அழகா இருக்கார்மா, ஒரு சினிமா நடிகர் மாதிரி!" என்றார் கண்ணம்மா.
"ஆமாம் சிஸ்டர்"என்று கூறிவிட்டு," அஜய், ஐ அம் குமரன், ஹி இஸ் செந்தில் ' என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டான் குமரன் .
"ஹலோ குமரன் ஹவ் ஆர் யு?" என்று அஜய் பதிலுக்கு அவனை விசாரித்தான் "ஹலோ செந்தில்?"
அவனும் 'ஹலோ!' என்றான் .
அவர்கள் ஒருத்தருக்கொருத்தர் நன்றாக பேசிக் கொண்டு இருந்தபோது டிபன் கொடுத்தார் லட்சுமி அதை எல்லோரும் உண்டு களித்தனர், தனம் அஜயிடம், "என்ன வாங்கியிருக்க அஜய்?"என்று விசாரித்தபோது..
"பாண்ட் ஷர்ட்ம்மா" என்று கூறியபோது,
"அஜய் கொஞ்சம் உள்ளே வாயேன் உன்னோடு கொஞ்சம் பேசணும்."
அஜய் எழுந்து அவள் பின்னே சென்றான்
"அஜய் ரெண்டு செட் இருந்தா கொடேன் இவங்க இன்னிக்கு தட்டு மாத்தும் பங்க்ஷன் திடீர்னு செய்துட்டாங்க நான் பிரிப்பர்டா இல்ல அதான் நீ ரெண்டு செட் வாங்கி இருந்தா அதை கொடுத்துட்டு அதே மாதிரியே நாளைக்கு நான் உனக்கு வாங்கி தரேன். "
"அம்மா, இத சொல்ல நீ ஏன் கஷ்டப் படற? இது எல்லாத்துக்கும் உனக்கு ரைட் இல்லையா, ஏன் இவ்வளவு தயங்கறம்மா? எடுத்துக்கோ என்ன வேணுமோ எடுத்துக்கோ வேற வாங்கிண்டா போச்சு. எனக்கு பொழுது போலம்மா நீ இல்லையா போர் அடிச்சுண்டிருந்தது சதிஷ் கூட்டான் அவனோட போனேன், ஏதோ சும்மா ஷாப் பண்ணேன், அதனால இது முக்கியமே இல்லை, கவலைப் பட வேண்டாம். "
என்று தன் பாகை எடுத்து வந்து கொடுத்தான்.
"அம்மா ஷர்ட் ஓகே பட் பாண்ட் அவங்களுக்கு பத்துமா தெரியல, ஏன்னா, அவங்க கொஞ்சம் ஷார்ட் இல்ல அதான் சொல்றேன்."
"கரெக்ட் அஜய், இத நான் யோசிக்கவே இல்ல, சரி நாம நாளைக்கு போய் வாங்கி அவங்க வீட்ல கொடுக்கலாம் என்ன சொல்ற?"
"அம்மா முதல்ல ஷர்ட்ட கொடுத்துடு, இன்னிக்கு பங்க்ஷனுக்கு கொடுத்த மாதிரி இருக்கும். "
"சரிப்பா நீ சொல்றதும் சரிதான், நீயே எடுத்துக் கொடு எந்த ஷர்டுன்னு. "
அவன் ரெண்டு ஷர்ட்டை எடுத்துக் கொடுத்தான், இரண்டுமே ரொம்ப காஸ்டலி ரொம்ப