"ஒன்னும் வேணாங்க இப்பதான் சாப்பிட்டு கிளம்பினோம்."
பரவாயில்ல என்று அவர்கள் கொடுக்கவும் கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு, நாங்க கிளம்பறோம். சாயந்திரம் பொண்ணு பார்க்க வாங்க!" என்று முறையாக அவர்களை அழைத்தாள், தனம்.
நிக்கத்தும், தனத்திடம் எதுவும் பேசவில்லை கொஞ்ச நேரம் அப்படியே இருவரும் அவர்கள் வீட்டில் பேசியதை அசை போட்டார்கள், பிறகு தனம் "ஆண்ட்டி நான் அவர்களிடம் பொய் சொன்னதால் என்னை தப்பாக நினைக்காதீங்க,ஆண்ட்டி!"
"நான் எதுக்குடா உன்னை தப்பா நினைக்க போறேன், உன் நிலைமை எனக்கு தெரியாதா? சரி விடு நீயும் இதுக்கு மேல மேல உன் கல்யாணத்த பத்தி பேச்சு வரக்கூடாதுன்னு தானே சொல்ற,பரவாயில்லடா!"
"சரி ஆண்ட்டி நான் ரொம்ப நாளாவே உங்கள கேக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன், உங்க மருமக இறந்ததும் பிறகு உங்களோட ரொம்ப பேசவே முடியல சொல்லுங்க , அவங்க இறந்ததும் ரொம்பவே மிஸ் செய்யறீங்களா ஆண்ட்டி?"
"அவ குழந்தைகளுக்கு அவங்கம்மீ இல்லேன்னுதான் கஷ்டமாயிருக்கு. இதுக்கு மேல அவளை பத்தி பேச ஒண்ணுமே இல்லம்மா!" என்று அந்த பேச்சை முடித்தார் .
"கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க ஆண்ட்டி, உங்க மகன் எப்படியிருக்காரு?"
"அவன்... வேண்டாம் தங்கம் அத பத்தி பேசவேணாமே!"
"சாரி ஆண்ட்டி, உங்க மனசுல ரொம்பவே வருத்தம் இருக்கும், அது கொஞ்சம் குறையணும்னா , நீங்க மனச திறந்து பேசுங்க, என்கிட்டத்தான் பேசணும்னு இல்லை, யார்கிட்டயாவது பேசுங்க ஆண்ட்டி!"
"சரிம்மா!" அதோடு நிறுத்திக் கொண்டார், அவர் மனதில் குற்ற உணர்வு .
"ஆண்ட்டி முதல்ல நகை வாங்கிட்டு அப்பறம் புடவையெல்லாம் வாங்கலாமா?" என்று தனம் கேட்க,
"வேண்டாம் தங்கம் , முதல்ல புடவை வாங்கிட்டு நகை வாங்கலாம் தனம், ஏன்னா, நகையை வாங்கிட்டு ரொம்ப நேரம் வேற கடையில போய் இருக்க வேண்டாம்டா காலம் கெட்டுக் கிடக்கு அதான் சொல்றேன்!"
'சரிங்க ஆண்ட்டி நீங்க சொல்றதுதான் கரக்ட் அதனால முதல்ல புடவை வாங்கிடலாம்!"
நிக்கத் டிரைவரிடம் புடவைகடை பேரை சொல்லி அங்கு போகச் சொன்னார் .
புடவை கடையில் நிறைய புடைவைகள் வாங்கினாள். " என்னடா இவ்வளவு புடவை வாங்கியிருக்க? " என்று நிக்கத் கேட்கவும்.
"ஆமாம் ஆண்ட்டி தங்கச்சிகளுக்கு நல்ல புடவைகள் வாங்கலாம்னு வாங்கினேன், அப்படியே