“.நான் இப்ப உங்ககிட்ட சொல்லப் போற விஷயம் ரொம்ப ரொம்ப ரகசியமான விஷயம்!...அதனால கீப் இட் வித் யூ ஒன்லி!...ம்ம்ம்...போன வாரம் சிட்டில ஒரு பள்ளிக் கூடத்துச் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு...கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விஷயம் உங்களுக்குத் தெரியுமல்ல?”
“யெஸ் சார்!...அந்தக் குற்றவாளியைக் கூடப் பிடிச்சாச்சு!...அவன் பேரு நிர்மல்!...ஏற்கனவே அவன் மேலே ரெண்டு மூணு பாலியல் பலாத்கார கேஸ்கள் இருக்கின்றன...சரியான விட்னஸ் இல்லாததினால் அந்தக் கேஸ்கள் அப்படியே தொங்கிட்டிருக்கு!”
“கரெக்ட்!...நாளைக்குக் காலைல நீங்கதான் அவனைக் கோர்ட்டுக்குக் கூட்டிட்டுப் போறீங்க!...போற வழில நீங்கதான் அவனை என்கவுண்டர் பண்ணப் போறீங்க!”
திடுக்கிட்டுப் போன தீனதயாள் “சார்!...நான் எப்படி என்கவுண்டர்?....என்னோட இருபத்தி நாலு வருஷ சர்வீஸ்ல..இது வரைக்கும் ஒரு தடவை கூட...”
“ப்ச்!...மிஸ்டர் தீனதயாள்!...நீங்க அசிஸ்டெண்ட் கமிஷனர்!...அதுலும் சீனியர் ஹேண்ட்!...உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை!...இருந்தாலும் சொல்றேன்!...நம்ப டிப்பார்ட்மெண்டை பொறுத்தவரையில் மேலிடத்திலிருந்து வர்ற உத்தரவுகளை..ஏன்?...எதுக்கு?...ன்னு கேட்காம உடனடியாச் செய்து முடிக்க வேண்டியதுதான்...நம்ம டியூட்டி...!...ஸோ...டூ வாட் ஐ ஸே!” என்றார் கமிஷனர் கண்டிப்புடன்.
மறு நிமிடமே முகத்தை மாற்றிக் கொண்டு “யெஸ் சார்!” என்று அதை ஒப்புக் கொள்ளும் விதமாய் மீண்டுமொரு முறை சல்யூட் அடித்தார் தீனதாயாள்.
“நாளைக்குக் காலைல ஆறு மணிக்கு அந்த அக்யூஸ்டை வேன்ல ஏத்திட்டுப் போறீங்க!...ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நீங்க போகும் போது உங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் வரும்!...உடனே வண்டியை நிறுத்தி அவனைக் கீழே இறங்கச் சொல்றீங்க!...இறங்கியதும் கொஞ்ச தூரம் நடக்க விட்டு அவனை ஷூட் பண்றீங்க!.. ஓ.கே.”
“ஓ.கே. சார்!” என்று விறைப்பாய்ச் சொன்ன தீனதயாள் சன்னமான குரலில் “சார்...பப்ளிக்...டிராபிக்?”
“யூ டோண்ட் வொர்ரி!...அந்த மாதிரி எந்தத் தொந்தரவும் இல்லாத இடத்தில்தான் நீங்க வண்டியை நிறுத்தப் போறிங்க!...ஓ.கே மிஸ்டர் தீனதயாள் நீங்க போகலாம்!”
தீனதயாள் ஒரு சல்யூட்டை தந்து விட்டுத் திரும்ப
“மிஸ்டர் தீனதயாள்...விஷயம் துளியும் லீக்காகி விடக் கூடாது!...ஆனா...நீங்கதான் பொறுப்பேற்க வேண்டி வரும்!...பி...கேர்ஃபுல்!”
“ஓ.கே.சார்!”