பார்த்தேன்...கண்ணே கலங்கிடுச்சு!”
“ரிலாக்ஸ்...ரிலாக்ஸ்...மிஸ்டர் தீனதயாள்! ...நீங்கெல்லாம் எங்களுக்கு ரோல் மாடல் மாதிரி....நீங்களே இப்படி கலங்கி நின்னா எப்படி?...ம்ம்ம்...எழுந்திரிங்க...கேண்டீனுக்குப் போவோம்...சூடா காபி சாப்பிடுவோம்!”
தீனதயாளுவை ஆறுதல் படுத்தும் விதமாய் அங்கிருந்து நகர்த்தி கேண்டீனுக்கு இட்டுச் சென்றார் அசிஸ்டெண்ட் கமிஷனர் முத்துக்குமார்.
மறு நாள் காலை ஏழு மணியிருக்கும் வீட்டின் முன்புறமிருந்த அந்தச் சிறிய தோட்டத்தில் செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார் தீனதயாள்.
அவரது மனைவி பார்வதி சமையலறையில் வேலையாயிருந்தாள்.
வாசலில் டாக்ஸி வந்து நிற்கும் ஓசை கேட்க தன் வேலையை அப்படியே நிறுத்தி விட்டு வந்து எட்டிப் பார்த்தார் தீனதயாள். “யாராயிருக்கும் காலங்காத்தால?” தனக்குத் தானே கேட்டபடி நின்றவர்டாக்ஸியிலிருந்து இறங்கிய நபரைப் பார்த்ததும் முகம் பிரகாசமானார். அவர் மனசுக்குள் மத்தளச் சத்தங்கள் ஒலித்தன நாதஸ்வரங்கள் இசைத்தன. அவர் கண்களில் உற்சாகத்துளிகள் உற்பத்தியாகி கன்ன மேடுகளில் கழன்று விழுந்தன.
“அது...அது...நி...நிவேதிதா...தானே?”
பாய்ந்தோடி அவள் முன் நின்று இரண்டு கைகளையும் விரித்து நீட்டி கண்கள் கலங்க ஆனந்தமாய்ச் சிரித்தார்.
குபீரென்று தந்தையைக் கட்டிக் கொண்டு கதறிய நிவேதாவை வீட்டிற்குள் அழைத்து வந்தார். உள்ளே நுழையும் போதே “மகெஸ்வரி...வா..வந்து பாரு!..யாரு வந்திருக்காங்க!ன்னு வந்து பாரு!” சின்னக் குழந்தை போல் சந்தோஷத்தில் கூவினார்.
கைகளைத் துடைத்துக் கொண்டு அவசர அவசரமாய் வந்த மகேஸ்வரி நிவேதிதாவைக் கண்டதும் வாய் விட்டு அழுதவாறே ஓடி வந்தாள்
“அடித் தங்கமே!..என் கண்மணி!...எங்கேடி போயிருந்தே இத்தனை நாளா?...எங்களையெல்லாம் தவிக்க விட்டுட்டியேடி!” கட்டிக் கொண்டு கதறினாள்.
அப்போது நெஞ்சுப்பகுதியில் ஏதோவொன்று உறுத்த “விருட்”டென்று மகளை விலக்கி அவள் கழுத்தை உற்றுப் பார்த்தாள்.
தாலி.
தலையைத் தூக்கி நேருக்கு நேர் மகளைப் பார்த்த தாய் அவள் தாலியைத் தொட்டுக் காட்டி பார்வையாலேயே கேட்டாள்.
“என்னை மன்னிச்சிடுங்கம்மா!...அப்பா மேலே இருந்த கோபத்துல...நானே பேப்பர்ல விளம்பரம் குடுத்து நானே ஒரு கணவனைத் தேடிக்கிட்டேன்!...என் கல்யாணத் தகவலைக்