சர்ப்ரைஸ் கொடுக்லாம்னு பார்த்தா நீங்க இவ்ளோ ஷாக் ஆயிட்டீங்க?”
அவர் இன்னம் ஷாக்கிலிருந்து வெளி வரவில்லை.
“ சாய்ரா எங்க பாட்டிம்மா?”
“அவ….அவ….
“என்ன ஆச்சு பாட்டிம்மா உங்களுக்கு? ஏன் இப்படி இருக்கீங்க, ஆர் யு ஆல்ரைட்?”
அங்கிருந்த எல்லோரையும் அப்போதுதான் பார்த்தான் “ ஊப்ஸ், ராங் டைம்..” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
“ அத்த, இது யார்?”
அப்போ வெளியே வந்த சாய்ரா “பையா!” என்று அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.
“மை ஏஞ்சல்!” என்று அவளை தூக்கிக் கொண்டான்.
“ இன்னும் நீங்க சொல்லல அத்த யார் இந்த பையன், நம்ம அப்துல் ஜீ மாதிரியே இருக்கான? “
“அத நான் சொல்றேன்!”
எல்லோரும் திரும்பி பார்த்தார்கள், அங்கே அப்துல் நின்று கொண்டிருந்தான்.
“அம்மி பசங்கள கூட்டிட்டு உள்ள போங்க, வாப்பா எங்கம்மி?”
“அவங்க காலைலியே ரெக்கார்டிங்க்கு போயிட்டாங்க."
"சரி நீங்க உள்ள போங்க அம்மீ, நான் பேசிக்கறேன்."
அஜய்க்கு தெரிஞ்சு போச்சு, ஏதோ பிரச்சினைன்னு, தன் அப்பாவின் பேச்சு, அவருடைய முகத்தில் கடுமை, இது அவனுக்கு புதிதாக இருந்தது. அவரால் இப்படியும் இருக்க முடியும் என்று அவன் நினைக்கவே இல்லை, அவனிடமும் அவன் அம்மாவிடமும், காட்டும் பரிவும், அன்பும் அவன் சாதுவானவனாகவே நினைத்தான் இப்போது அவனின் முகத்தின் கடுமையை கண்டு பயந்தான்.
"டாட்...."
"உள்ள போ அஜய்..." என்றான் கோவத்தோடு..
அவன் வாயை திறக்காமல் உள்ளே சென்றான்.
அவன் சாய்ராவை திசை திருப்ப, ஏதோ விளையாடிக் கொண்டிருந்தான், வெளியே என்ன நடக்கிறது என்று கூட கவலைப் படவில்லை. நிக்கத், வெளியே என்ன நடக்குதோ என்று பயந்துக் கொண்டே ஜாஃபருக்கு போன் செய்தார்.