"என்னம்மா என்ன ஆச்சு?" என்று உருகினான், அப்துல்.
"எனக்கு என்ன ஆச்சு, ஏன் கை இவ்ளோ வலிக்கறது ?" என்று கண்ணீரோடு கேட்கவும், அவன் கை முஷ்டியை மடித்து தன்னை கட்டுப் படுத்திக்க கொண்டு, "உனக்கு சீக்கிரமே சரியாயிடும் தனம் கவலை படாத, நான் டாக்டரை கூப்பிடறேன், ஏதாவது மருந்து கொடுப்பாங்க, " என்று வெளியே போக முற்பட்டான்.
"நில்லு இது, எனக்கு என்ன ஆச்சுன்னு சொல்லு?" என்று கடிந்த குரலிலில் கேட்டாள்.
அப்போது டாக்டர் அபயம் உள்ளே நுழைந்தார். " என்னம்மா, எதுக்கு கோபப் படற? வலிக்கறதா? நர்ஸ், பெயின் கில்லர் இன்ஜெக்ஷன் எடுத்துட்டு வா!" என்றார், டாக்டர் அபயம்.
"டாக்டர் எனக்கு என்ன அச்சு? ஏன், என் கையில கட்டு போட்டிருக்கு ?
"உங்க மேல யாரோ கத்தி வீசியிருக்காங்க தனம், நீங்க அவங்கள பாத்தீங்களா?"
"கத்தி வீசினாங்களா? அப்படி யாரு எனக்கு எதிரி இருக்காங்க? எனக்கு எதுவும் தெரியாது," என்று கூறிக் கொண்டே அப்துலை பார்த்தாள்.
"அஜய் எங்க ஆது, அவன் எப்படியிருக்கான், அவனுக்கு ஒண்ணுமில்லையே?" என்று பயத்துடன் கேள்விகளை அடுக்கினாள்.
"என் அஜய நான் உடனே பார்க்கணும்!" என்று எழ முற்பட்டாள்.
"படுங்க தனம், உங்க மகன் அஜய் இங்கதான் இருக்காரு, நான் உள்ள வர சொல்றேன், இப்படிலாம் எழுந்துக்க கூடாது, உங்களுக்கு இன்னும் ரத்தம் ஏறிக் கொண்டிருக்கு அதனால படுங்க, "சார் நீங்க உங்க மகனை உள்ள கூப்பிடுங்க, இந்த நேரத்துல அவங்க உணர்ச்சி வசப்படக் கூடாது. "
அப்துல் வெளியே சென்று அஜயையும் மற்றவர்களையும் உள்ளே வர சொன்னான்.
உள்ளே வந்தவர்களில் அவள் கண்ணுக்கு அஜய் மட்டுமே தெரிந்தான்.
"அஜய் கண்ணா உனக்கு ஒண்ணுமில்லையே?" என்று கண்ணீர் வடித்தாள்.
"எனக்கு என்ன ஆச்சும்மா, நான் நல்லாத்தானே இருக்கேன், ஏன் உனக்கு என்ன சந்தேகம்?"
"என்னை கொல்ல நினைச்சவங்க உன்னையும் ஏதாவது செய்ஞ்சுட்டாங்களோன்னு பயந்தேன்."
அவன் தன தாத்தா ஜாஃபரை திரும்பி பார்த்தான் "அம்மா, உன் மேல கத்தி எரிஞ்சவன நீ பார்த்தியா, அவனை அடையாளம் காட்ட முடியுமா?"
"என் மேல கத்தி எரிஞ்சு விஷயமே, ஆதூ சொல்லித்தான் தெரியும், ஆனா என் மேல யாருக்கு, என்ன பகை, ஏன் என்னை கொல்ல பார்த்தாங்க?"
"சரிம்மா, அதல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம், இப்ப ஒரு குட் நியூஸ் இருக்கு அத பத்தி முதல்ல பேசலாம், மிச்சத அப்புறமா பேசிக்கலாம், அதுக்கும் முன்னாடி உன் உடம்பு எப்படி