ப்ளீஸ், அம்மா கண் முழிக்கச்சே நல்ல கிளீனா டீகா இருக்கவேணாமா? போங்க டாட்."
"தனம் கண் முழிச்சுட்டா என்ன பண்றது?"
"நீங்க அதுக்குள்ளே வந்துடலாம் டாட், போங்க நாங்களெல்லாம் இருக்கோமில்ல?"
"சரி நான் போய்ட்டு குயிக்கா வந்துடறேன்."
"சரி அப்படியே சாப்டுட்டு அம்மாக்கு கொஞ்சம் சூப்பும், ஏதாவது லைட்டா சாப்பிட எடுத்துட்டு வாங்க, நான் சுமதி அக்காகிட்ட சொல்லிடறேன்"
"சரி கொண்டுவரேன், நான் போயிட்டு வரேன் அம்மீ, வாப்பா" என்று கூறி விட்டு, வேகமாக கிளம்பி சென்றான்.
"சரிப்பா, கவலப் படாம போயிட்டு வா, ஐயா, நீயும் பத்தரமா இருந்துக்கப்பா ராஜா." என்றார் நிக்கத் மனதின் வேதனை தாளாமல்...
எல்லார் மனத்திலும் கவலை தோய்ந்திருந்தது.
"மாஸ்டர், உங்களுக்கு ஏதோ விஷயம் தெரிந்திருக்குன்னு நினைக்கறேன், யார் இத செய்ஞ்சாங்கன்னு உங்களுக்கு தெரியுமில்ல மாஸ்டர்?" என்று அஜய் கேட்கவும், அவரும் நிக்கத்தும் விக்கித்து நின்றனர்.
"என்ன பாட்டிம்மா உங்களுக்கு கூட தெரியுமா? யார் அது, எங்க அம்மாவை கத்தியால் குத்தினது? " என்று கண்கள் சிவக்க, தாய் இருக , அடிக் குரலில் அவன் கேட்கும்போது அந்த பிஞ்சு குழந்தையை குழந்தையாவே பார்த்து பழகியவர்களுக்கு, இந்த குரலும், கேள்வியின் தொனியும் அடி வயிற்றைக் கலக்கியது.
"என் கண்ணால, என் அம்மாவை கத்திக் குத்தோட பார்த்தவன் பாட்டிம்மா, எங்கம்மா யாருக்கு என்ன கெடுதல் செய்ஞ்சாங்க அவங்களுக்கு ஏன் இப்படி ஒரு துன்பம்? சொல்லுங்க பாட்டிம்மா யார் இத செய்ஞ்சாங்க?"
"அது.....எனக்கு தெரியாது ராஜா!"
"இல்ல மாஸ்டர் உங்களுக்கு எதோ தெரிஞ்சிருக்கு. இல்ல யார் மேலோ சந்தேகம் இருக்கு ஆனா சொல்லமாட்டேன்றீங்க... நான் யாரோடும் சண்டை போட மாட்டேன் மாஸ்டர், அவங்ககிட்டேர்ந்து எங்கம்மாவை காப்பாத்த போறேன், அதுக்குத்தான் கேட்டேன்."
அதற்கு மேல் அவனிடம் விஷயத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை ஜாஃபருக்கு, "அஜய், எங்களுக்கு சிலர் மேல சந்தேகம்தான் இருக்கு, ஆனா அவங்கதான் உண்மையா செய்ஞ்சாங்களான்னு தெரியாது?" என்று விஷயத்தை கூறினார் ஜாஃபர்.
"வேற யாருக்கு தனம் மேல கோபம் வரும் நீயே சொல்லு பாக்கலாம், அதான் இன்ஸ்பெக்டர்கிட்டயும் சொல்லி வச்சிருக்கேன், அவர் பார்த்துக்கறேன்னு கூறியிருக்கார், இத