நடக்கலானான்.
“சஞ்சய்” என மீண்டும் குரல் கேட்டது. என்னவானது இவள் குரலுக்கு என டக்கென திரும்ப அங்கே இளைஞன் ஒருவன் நின்றிருந்தான். நிமிடத்திவ் அவன் தங்கள் குடும்ப நண்பரின் மகன் என நினைவுக்கு வந்தது.
“ஹாய் சஞ்சய் எப்படி இருக்க?” என்றான் குறுகுறுப்பாக சஞ்சையை பார்த்த இளைஞன். அவன் பெர்ப்யூம் வாசனை மூக்கை துளைத்து மூளைக்கு சென்றது.
“நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க” என்றபடி அருகில் சென்றான். இவனை சஞ்சய் அதற்கு முன் பார்த்துள்ளான். தனுஷ் உடன் ஹைதராபாத்தில் ஒரு திருமணத்தில் சந்திதுள்ளான். இரண்டு வருடங்களுக்கு முன் இருக்கும்.
அவன் மென்மேலும் பேசிக் கொண்டே இருந்தான். சஞ்சய் சாதாரணமாக அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தாலும் அவன் பெயர் மட்டும் நினைவில் இல்லை. தன் மூளையில் இருந்த அத்தனை பைல்களையும் புரட்டியாகிவிட்டது. ரீசைக்கிள் பின்னில் உள்ள குப்பைகளையும் பார்த்தாகிவிட்டது. ம்கூம் பெயர் நினைவுக்கு வரவில்லை.
இத்தனை நேரம் பேசிவிட்டு “உன் பெயர் என்ன?” என்று கேட்பது நாகரீகமாக இருக்காது.
“சாகர்” என்று அவனை பின்னிருந்து யாரோ அழைக்க
ஆம் சாகர் தான் அவன் பெயர் என மூளையில் ஒரு மின்னல். . .
“சாகர் எவ்வளவு நேரமா வைட் பண்றது?” என சிணுங்கியபடி அவனருகில் வந்தாள் சௌமியா.
“ சௌமியா . . இவங்கள மீட் பண்ணதான் வந்தேன். ” என சாகர் சௌமியை அறிமுகப்படுத்தினான். சஞ்சையை கண்டு விழித்தாள் சௌமி.
அடுத்து சஞ்சையை அறிமுகம் செய்ய முயல . . “நான் சொல்றேன்” என்ற சஞ்சய், தனுஷ் மற்றும் பிருந்தா திருமணத்தைப் பற்றிக் கூறினான்.
“வாவ் தட்ஸ் கிரேட் நாம சொந்தம் ஆக போறோமா?” என சாகர் சொல்ல . . சௌமி பேய் முழி முழித்தாள்.
சில நிமிடங்கள் உரையாடிவிட்டு சஞ்சய் “எனக்கு கொஞ்சம் வேல இருக்கு . . யூ கைஸ் கேரி ஆன்” என சிறு புன்னகையோடு விடைப்பெற்று தன்வழி நடக்கலானான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் “சஞ்சய் . . சஞ்சய்” என அவன் பெயர் ஏலம் போனது.
சௌமி ஓடோடி வந்தாள் “அது வந்து சஞ்சய் . . .” திருவிழாவில் காணாமல் போன குழந்தையைப் போல தவிப்புடன் பேச முற்பட்டவளை அருகில் இருந்த நாற்காலியில் அமர்த்தினான்.
“ரிலாக்ஸ் சௌமி நீயும் சாகரும் லவ் பண்றீங்க . . உன் அக்கா கல்யாணம் முடியும்வரை யார்கிட்டயும் சொல்லக் கூடாது. அதானே?” நிதானாமாக கூறினான்.