இரண்டு நிமிடத்தில் சௌமியா வந்து சேர்ந்தாள். நால்வரும் பேசி சிரித்து உண்டனர். அவ்வபோது சௌமியா சஞ்சையை “எதையும் சொல்லவில்லையே” என கண்ணால் கேட்க
அவனும் “கவலைப்படாதே” என்றான்.
இந்த நயன பாஷையை மற்ற இருவரும் வேறு விதமாக புரிந்துக் கொண்டனர்.
***********
கூண்டில் அடைபட்ட சிங்கம் போல தாத்தா இங்கும் அங்குமாய் உலாவிக் கொண்டிருந்தார். முகத்தில் சிந்தனை ரேகை அதோடு ஒருவித ஏமாற்றமும் காணப்பட்டது.
எப்பொழுதும் இரவு ஏழரை மணிக்கு உணவு உண்டுவிடுவார்.
சாந்தி “மாமா நேரம் ஆச்சு சாப்பிட வாங்க” என்றாள்.
“உன் மகன் செஞ்ச காரியத்துக்கு சாப்பாடு தான் குறைச்சல்”
“சஞ்சய் ஏதாவது சொன்னானா?” ஆதங்கமாய் கேட்டாள். தனுஷ் தாத்தாவின் செல்ல பிள்ளை ஆயிற்றே. அவனைப் பற்றி புகார் வர வாய்ப்பில்லை.
“ தனுஷ் தான் உன் பிள்ளை” காட்டமாக பதில் வர
முனுக்கென்று முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை சிரமபட்டு அடக்கி “சஞ்சய் என் இரண்டாவது மகன்” என்று விட்டாள்.
தன் கணவனை என்னவென்று கேள் என்பதைப் போல் ஜாடைக் காட்டி உள்ளே சென்றாள்.
தன் மனைவியின் ஆணையை சிரமேற் கொண்டு தன் தந்தையிடம் “என்னப்பா ஆச்சு?”
“தனுஷ் எங்க?” தாத்தா ஏதோ குற்றவாளியை விசாரிப்பது போல தன் மகனை கேட்டார்.
“இந்நேரத்துக்கு ஆபிஸ்ல தான் இருப்பான்”
“இல்ல ஆபிஸ்ல இருந்து சீக்கிரமே கிளம்பியாச்சாம்”
“அட ஆமா பிருந்தாவ பாக்க போயிருப்பான்” முகம் முழுவதும் புன்னகையால் ததும்பியது.
“இந்த உலகத்துலயே உன் மகனுக்கு மட்டும்தான் கல்யாணம் ஆகப் போகுதா?” என்றார் இடக்காக
“ஏன்பா இப்படி எல்லாம் பேசுற?”
“பின்ன என்னடா . . போனை எதுக்கு ஆப் பண்ணிருக்கான். அப்படி என்ன தலை போகிற வேலை?”
“சார்ஜ் போயிருக்கும்”
“ஒரு கம்பெனியோட மேனேஜிங் டைரக்டர் மாதிரியா நடந்துக்கறான் உன் பையன். எப்ப பாரு அந்த பொண்ணோட சுத்திட்டு” என முகம் சிவக்க உஷ்ணமானார்.
“அப்பா தினமும் ஆபிஸ் வேலை தான் பண்றான் . . இன்னைக்கு தான் . . .” என்ற தன்