(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

“ ஓகே சார், பை!”

அஜயும், அப்துலும் உள்ளே நுழைந்தார்கள்.

“ எங்க போயிட்டீங்க ரெண்டு பேரும்?”

“ நீ ஃபோன் பேசிட்டிருந்த, அதான் நாங்க வெளியே பேசிட்டிருந்தோம்.”

“ மேனேஜர் சார்தான் பேசினார், ஆது.”

“ஆமாம், இப்பத்தான் அஜய் விஷயத்தை சொன்னான், நீ என்ன சொன்ன தனம்?”

“உங்க ரெண்டு பேர்கிட்டையும் பேசிட்டு சொலறேன்னிருக்கேன்.”

“ அம்மா, இது உங்களுக்கு நல்ல ஆப்பரசுனிடி, நல்ல ப்ஃயுச்சர், இந்த ஜாப் ஆபஃரை அக்ஸப்ட் பண்ணிக்கங்கம்மா “

“ நீ என்ன சொல்ற ஆது?”

“ அஜய் சொல்ற மாதிரி, இது ஒரு நல்ல ஆபஃர்னு நினைக்கிறேன், டெசிக்ஷன் இஸ் யுவர்ஸ்.”

“ஆது, நம்ம அஜையை இங்க தனியாவிட்டு எங்கேயும் போக எனக்கு இக்ஷ்டமில்லை.”

“என்னம்மா, நான் என்ன சின்ன பையனா? நான் மெடிசின் படிக்கிறேன். அது மட்டுமில்ல , எனக்கேதாவது வேனும்னா மாஸ்டரும், பாட்டிம்மாவும் இருக்காங்க, அப்பறம் என்னம்மா?”

“அஜய் சொல்றது சரிதான் தனம், கொஞ்ச நாள் வெளிநாட்டில இருந்துட்டு வரலாம்.  அஜயும் அப்பப்ப லீவ்ல வந்து நம்மளை பார்க்க வருவான். என்ன அஜய் வருவதான?”

“ கண்டிப்பாக டாட்!”

எப்படியோ, அஜயும், அப்துலும் அவளை சமாதானப் படுத்தி ஒற்றுக்கொள்ள வைத்தனர்.

ஜாபஃரிடமும், நிக்கத்திடமும்

கலந்து பேசினார்கள், அவர்களும் இதுவே சரி என்றார்கள்.

தனத்தின் அம்மா, அப்பா வந்திருந்தார்கள், அவளைப் பார்பதற்கு. அவர்களிடம், அவள் சிங்கப்பூர் போவதை எடுத்துக் கூறினாள். அவர்களுடைய பாங்க் விவரங்களை எடுத்துக் கூறினாள்.

அவர்கள் செலவிற்கு மாதாமாதம், அவர்கள் கணக்கிற்கு பணம் வந்துவிடும் என்று, எடுத்துக் கூறினாள்.

அவர்கள் தங்கைகளும் கும் முறையான தையல் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்கள் பொடிக் வைத்தும் கொடுத்தாள். இதற்கு மேல் பிழைத்துக் கொள்வது, அவர்கள் சாமர்த்தியம் என்று கூறிவிட்டாள்.

தனத்தின் காயம் சரியானவுடன், அவர்களும் ரெடியானார்கள்.

இம்ரானையும், சாய்ராவையும் ஜாபஃரிடமும், நிக்கத்திடமும் விட்டு விட்டு அவர்கள் மட்டும்

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.