அன்புடன் சிறிதளவேணும் கண்டிப்பு அவசியம். அதனாலேயே, அவள் தலையிடாமல் இருந்தாள்.
அவனுக்கு வேண்டிய சவுகரியங்களை செய்து விட்டு, ஒரு நண்பனிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அவர்கள் ஊருக்கு கிளம்பினார்கள் .
அஜய் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு கிராமத்தில், தன் மருத்துவ நண்பர்களுடன், முகாம் ஒன்று நடத்துவான். இம்முறை, இலவச மருத்துவ முகாம் நடத்தியது அவன், அம்மா இருந்த கிராமம் தான். அவன் அங்கு சென்ற போது, அங்கு வந்து குழுமி இருந்தவர்கள் அவனைப் பார்த்து "டேய் அப்துல், நீ மருத்துவனா ஆயிட்டியா?" என்று கேடடான், ராஜா, அப்துலின் சின்ன வயது நற்பயன்.
"நான் அவரோட மகன்!"
"அப்படியா, டேய் சாரதி இதோ பாருடா, நம்ம அப்துலோட மகன் மருத்துவருடா! " என்று கத்தினான்.
பிறகு அங்கிருந்தவர்கள் எல்லாம் அவர்களுக்குள் அப்துல் தனம், ஜாஃபர், நிக்கத் என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள், கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
"உங்க அன்புக்கெல்லாம் நன்றிங்க, நான் எல்லா நோயாளிகளையும் கவனிக்கணும், தயவு செய்து என்னை வேலை .பார்க்க விடுங்க," என்று கூறிவிட்டு,தன் வேலையை செய்ய ஆரம்பித்தான்.
அவன் அந்த ஊரில் உள்ள தங்களது நிலம், வீடு என்று எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்தான்.
அவனுடைய ஆஸ்பத்திரி திறப்பு விழா வெகு விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தார்கள் ஜாஃபரும், அஜயும். அன்று இரவு அப்துல், தனம், சாயிரா, பாரதி எல்லோரையும் விமான நிலையத்தில் வரவேற்றனர், ஜாஃபர்,
நிக்கத், அஜய்.
எல்லோரையும் ஏற்றிக் கொண்டு சென்றது கார். எல்லோரும் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வீடு போய் சேர்ந்தார்கள்.
வீட்டிலும் எல்லாம் விவரமாக ஆஸ்பத்திரியை பற்றி கூறினான் அஜய். அதை கேட்டபடி உட்கார்ந்தார்கள் தனமும், அப்துலும் .
நிக்கத், குழந்தைகளை கூட்டிக் கொண்டு போய் பால் கொடுத்து அவர்களை தூங்க வைத்து விட்டு அவரும் படுத்துக் கொண்டார், குழந்தைகளோடு.
ஆஸ்பத்திரி திறப்பு விழா வெகு விமரிசையாக நடந்தது. அப்போது ஸ்மிருதியை பார்த்தார்கள், அஜயின் பெற்றோர்கள்.
ஸ்ம்ரிதி நல்ல உயரம், களையான முகம், நல்ல நிறம், அழகாக இருந்தாள். தனம்,