"பாட்டிம்மா, இன்னும் குழந்தையை பார்க்கல பாட்டிம்மா, பார்த்துட்டு சொல்றேன், இதுக்கு அப்புறம் அப்பா வந்து உங்களை கூட்டிட்டு வருவாரு, குழந்தைகளை ரெடி பண்ணி வைங்க இம்ரானும் சாய்ராவும் வந்து பார்க்கட்டும் குழந்தையை."
"சரி தங்கம் ரெடி பண்ணி வைக்கிறேன், அபூவை வர சொல்லு."
"சரி பாட்டிமா, அப்புறம் பார்க்கலாம்."
"சரி அஜய்!" என்று ஃபோனை வைத்தார் நிக்கத்.
"இம்ரான் சாய்ரா, எந்திருங்க, குளித்து ரெடியாகுங்க, நாம இப்போ தங்கை பாப்பவ பார்க்க போகணும்."
"பாட்டிமா தங்கைப் பாப்பாவா, என்ன சொல்றீங்க?" என்று இம்ரான் கேட்டான்
"ஆமா இப்ப தான் தஙஙகை பாப்பா பொறந்திருக்கு. இப்போ, நீங்க ரெண்டு பேரும் எழுந்திருங்க.
"சாய்ரா தான், எனக்கு அம்மா வேணும்,
படி அம்மி" என்று கூறியது.
"நாம இப்போ உங்க அம்மாவ தான் பார்க்க போகிறோம்,தங்கை பாப்பாவும் பார்க்கப் போகிறோம்!"என்று கூறினார் நிக்கத்.
இரண்டு குழந்தைகளும் வேகவேகமாக ரெடி ஆனார்கள் நிக்த்தும் ரெடியானார்.
குழந்தையை கிளீன் செய்து அதை துவாலையில் சுருட்டி கொண்டு வந்து, தனத்தின் பக்கத்தில் விட்டார்கள். தனம் மிகுந்த அசதியில் நன்றாக உறங்கி விட்டாள்.
அஜய், தனத்தின் பக்கத்தில் அமர்ந்து, குழந்தையின் கன்னத்தையும், காலையும், கையையும், தடவிக் கொடுத்து அதனுடன் மெதுவாக பேசிக்கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருந்தான்.
குழந்தை கொள்ளை அழகுடன் இருந்தது. அஜய் தன் விரலை அதன் கையில் வைத்து, ரசித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் தனம் முழித்துக்கொண்டாள். அருகில் அஜய், குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே இருப்பதைப் பார்த்து ரசித்தாள். பிறகு திரும்பி படுத்துக் கொண்டு அஜய் கையை தன் குழந்தைகள் இரண்டும் ஒன்றாக பிடித்து மகிழ்ந்தாள்.
அவளைத் திரும்பிப் பார்த்த அஜய்," ஹவ் ஆர் யூ மா? "என்று கேட்டான்.
"நான் நல்லா இருக்கேன், என்ன சொல்றா உன் தங்கபாப்பா?" என்று கேட்டாள்.
" ஷி இஸ் அடோரபில்!" என்றான் அஜய்.
"ஆமாம், அவள் அண்ணனை போல!" என்று தனம் கூறினார்.
"ஆமாம் அம்மா, நாங்க இருவரும் எங்க அம்மா அப்பாவைப் போல!" என்று கூறினான், அஜய்.