எல்லோரும் சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு எல்லாரையும் அழைத்துக் கொண்டு, சாப்பிட ரெஸ்டாரண்ட்டுக்கு சென்றார்கள், அஜயுடன் எல்லோரும் .
அப்துல், ஹாஸ்பிடலில் தனத்துடன் இருந்தான் .
அப்துல், தனத்தின் நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு, "நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுடா, நான் குழந்தையைப் பார்த்துக்கறேன். எனக்கு ரொம்ப சந்தோசஷமா இருக்கு தனம் , வாப்பா, அம்மீ, அஜய் எல்லாரும் வந்திருக்காங்க, பார்த்து ரொம்ப மாசம் ஆயிடுத்து, வாப்பா வெளியூர் போனால் கூட ஒரு வாரத்திற்கு மேல் எங்களை விட்டு இருந்தது கிடையாது. அம்மீயும் அதே மாதிரித்தான், ரொம்ப நாள் பிரிந்து இருந்ததில்லை. இப்போ ரொம்ப மாதமா, பிரிந்து இருக்கறோம், சிங்கப்பூரில் கூட ஓரிரு நாட்கள் தான் இருந்தார்கள்" என்று கண்ணில் நீர் துளியோடு கூறினான்.
"இந்தப் பெண்கள் எல்லாம் எப்படி அவங்க குடும்பத்தை விட்டுட்டு வந்து இன்னொரு புதிய குடுபத்தை தன் குடும்பமா நினைத்து தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்களோ?" என்று கூறினான்.
அவன் கையை எடுத்து தன் உதட்டில் வைத்து முத்தம் கொடுத்தவள், "தேங்க்ஸ்" என்றாள்.
"எதுக்குடா?" என்று கேட்டுக் கொண்டே அவள் தலை உச்சியில் . அவன் உதட்டை வைத்து அழுந்த முத்தம் கொடுத்து.
"உனக்குத்தான் நான் தேங்க்ஸ் சொல்லணும், எனக்கு ஒரு நிம்மதியாக, சந்தோஷமாக என் வாழ்க்கையை மாத்தினத்துக்கு .நமக்கு இப்போ நான்கு குழந்தைகள்.நினைச்சு பார்க்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா, தனம்."
"ஆமாம் ஆது, ஐ அம் வெரி ஹாப்பி டூ !"
"என்ன சொல்றா, நம்ம ஜுனியர் தனம் ?" என்று கேட்டுக் கொண்டே அவளை பார்த்தான், அவளோ, காதலுடன் அவனை நோக்கினாள் .
"ஐயோ இப்படி பார்க்காதடி, இது ஹாஸ்பிடல், அப்பறம் ஏடா கூடமா நடந்தால் நான் பொறுப்பில்லை, தனம்மா ."
அவள் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே, " போதும் ஆது, உனக்கு வெட்கமே இல்லை."
"உன் கிட்ட எனக்கு என்னடா வெட்கம், நிஜம்மாவே நீ எவ்வளவு அழகு தெரியுமா?"
"அப்படியா சார்?" என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, நர்ஸ் உள்ளே வந்தாள், அவனிடம் சில
பேப்பர்ஸ் கொடுத்து அதை ஃபில் அப் செய்து ஆபிசில் கொடுக்கும் படி கூறினாள், அந்த நர்ஸ்.