பேசிட்டு இருந்தோம்."
"வாட் கல்யாண வயசா, என்ன சொல்ற நீ?"
" ஐ மீன் அவனுடைய மனசுல காதல் வந்துவிட்டது."
"மாம் கீப் கொயட்!" ஆண்பிள்ளை என்றால் வெட்கம் வராதா என்ன அவன் முகம் வெட்கத்தில் சிவந்தது.
"இது பாருடா என் மகன் வெட்கப்படுகிறான். "என்று அப்துல் அவனிடம் வம்புக்கு சென்றான்.
"டாட் நத்திங் சீரியஸ், சோ டோண்ட் கெட்
எக்ஸைடெட்!"
"சரி விஷயத்தை சொல்லு நான் எக்சைட் ஆறதா, வேண்டாமா என்று முடிவு பண்றேன்."
" அது வந்து, அந்தப் பெண் பேர் ஸ்ம்ருதி."
என்று அஜயை பார்த்துக் கொண்டே பேச்சை நிறுத்தினாள். அப்துல் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தான், அஜய் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.
அப்துல் முகம் சிரிப்புடன், தன் மகனை பார்த்து வியந்தான். "இத பாருடா, என் மகன் இவ்வளவு வெட்கப் படுகிறான்."
"தனம், நம்ம மகனுக்கு கல்யாண வயசு வந்துடுத்தா? நம்பவே முடியவில்லை?" என்று அவன் கூற,
"டாட், கல்யாணமெல்லாம் இப்போ இல்லை, அதுக்கு ரொம்ப வருஷம் இருக்கு. ஐ லைக் ஹெர், அவள் என் கிட்ட வந்து ப்ரொபோஸ் செய்தாள். அவளிடம் ஏற்கனவே சொல்லிட்டேன், எனக்கு இப்போது கல்யாணத்தில் இன்டெரெஸ்ட் கிடையாது, என்னோட ஹாஸ்பிடல் ஆரம்பித்த உடன் தான் நான் கல்யாணம் செய்துப்பேன்னு சொல்லிவிட்டேன்."
" குட். டூ வாட்டவர் சூட்ஸ் யு. நீ ரொம்ப பிரில்லியண்ட் பாய், உனக்கு தெரியும் என்ன செய்யணும்னு, சோ நீ என்ன செய்தாலும் நாங்க சந்தோசஷப் படுவோம்,அஜய். ."
"தேங்க்ஸ் டாட். எனக்கு ஹாஸ்பிடல் ஆரம்பிக்கிறது ரொம்ப முக்கியம். டிரஸ்ட் ஒன்று ஆரம்பித்து, பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு மறு வாழ்வு கொடுத்து அவர்களை தங்கள் வாழ்க்கை வாழ வழி செய்ய வேண்டும்!" என்று அவன் தன் கனவுகளை கூறிக் கொண்டே போனான்.
"உன்னோட கனவுகள் எல்லாத்திலேயும், எங்களோட ஒத்துழைப்பும் இருக்கும், அஜய்! "
"தேங்க்ஸ் டாட் !"
அடுத்த சில வருடங்களில், அஜய் பெரிய நடிகரானான். பெரிய டாக்டராகவும் ஆனான். அவனுடைய ஆஸ்பத்திரியும், கட்டி முடிந்து விட்டது. அவன் தன் பெற்றோர்கள் வரும் போது