(Reading time: 16 - 32 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

மேம்பாடு சார்ந்த பணிகளைச் செய்ய ஆரம்பித்தாள். இருவரும் அரசுப்பள்ளிகளில் தன்னார்வலர்களாக உதவிகள் செய்வதிலும், முதியோர் இல்லங்கள் சென்று நேரம் செலவிடுதலிலும், பள்ளிக் குழந்தைகளுக்கு கதை சொல்லல் போன்ற பணிகளில் இணைந்து ஈடுபட்டனர்.  அவர்களிருவரும் ஈட்டிய வருமானத்தில் சிக்கனமாக இருப்பதால் சேமிக்க முடிந்தது, வீட்டை சற்று மாற்றிக் கட்டவும் முடிந்தது. இயற்கைக் காற்றும் வெளிச்சமும் நிறைந்திருக்கும் வகையில் கல்லூரி நாட்களில் அவர்கள் திட்டமிட்டவாறே தினேஷ் அவ்வீட்டைக் கட்டினான். குழந்தைகளுக்கும் ஏற்றவாறு வீட்டை அமைத்தபின் பெரிய சாதனையே சாதித்தது போலிருந்தது. இருவருக்கும் தத்தம் பெற்றோரின் நினைவுகள் வரும் போது, ஒருவரையொருவர் ஆறுதல் படுத்திக் கொள்வர்.

18 நவம்பர் 2015

வீட்டைக் கட்டி முடித்து,குடிபுகுந்த மாதத்திலேயே, தினேஷுக்கு அடுத்ததொரு இன்பமான செய்தி காத்திருந்தது. ரம்யா கருவுற்றிருந்தாள். தினேஷின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ராஜேஷுடன் இச்செய்தியைப் பகிர்ந்தவன், சற்றே தயக்கத்துடன் ரம்யாவின் அம்மாவிற்கும்  போன் செய்து சொன்னான். அவளின் கனவைப் போல வீட்டைக் கட்டி, இப்படித் தங்கமாக மகளைப் பார்த்துக் கொள்ளும் அவனை ஜாதியின் பெயரால் வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே என்று அம்மா சொல்ல, மகள் தாயாகப் போகிறாள் என்ற செய்தி கேக்கவும் அப்பாவின் மனதும் மாறியது. பழைய கோபங்களை எல்லாம் விட்டுவிட்டு ரம்யாவின் அம்மா, அப்பாவும் சமாதானமாகி அவர்களை ஏற்றுக் கொண்டுவிட்டனர். வேனிலும். கதிரும் பிறக்கப் போவது தம்பியா தங்கையா என்று ஆவலுடன் இருந்தனர். ஸ்கேனில் இரண்டு கருக்கள் என்று சொல்லவும் தினேஷுக்கு மகிழ்ச்சியோடு கொஞ்சம் பதட்டமும் வந்தது. அவளின் வளைகாப்பு முடிந்தும் தன்னுடனே ரம்யா இருக்கட்டும் என்று சொல்லிவிட்டான் தினேஷ். ரம்யாவை விட்டுட்டு அவனால் இருக்கவே முடியாது,  குழந்தைகள் இருவரும் பள்ளி செல்வதும் தடைபடுமென்றும், குழந்தை பிறந்ததும், ரம்யாவின் அம்மா, அப்பா தங்கள் வீட்டில் வந்திருந்து ரம்யாவையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டான். அவளின் பிரசவத் தேதி நெருங்க நெருங்க எந்தக் குறையும் இல்லாமல் இரு பிள்ளைகளையும் இவள் சுமந்து பெற வேண்டும் என்று. தினம் தினம் தனது அம்மாவை நினைத்துப் பிரார்த்தித்துக் கொள்வான். நாடு இரவில் பிரசவ வலி வந்து துடித்தவளை, ஆட்டோவில் அவசரமாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். ரம்யா அந்நேரத்திலும் பிரசவ அறையிலும் துணைக்குத் தன்னுடன் இருக்க தினேஷைக் கூப்பிட்டாள். அவள் வலியில் இருப்பது தினேஷுக்கும் வலித்தது. ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள். “ஹையா தம்பியும் தங்கையும்!” என்று வேனில், கதிர்

5 comments

  • Such a nice story and a very good ending...<br />This story reminded lot of moments in college life..lab assignment seminar projects life stories in college final year your etc...
  • Avanga parents perumai padura alavukku vazhandhu kattitanga rendu perum :hatsoff: nalla puridhal irundhal mattume idhunsadhiyam :yes: ivanga rendu peroda unconditional love is simply superb....<br />Azhagana kadhai ma'am 👏👏👏👏👏👏👏 <br />Parents um konjam pillaigalukaga yosithu parkalam, thappana choice aga irundhal ippadi otha leg la stand panuradhu okay...but ivangala pathi theriyamal just caste pidichi thongikittu irukamal they can stand for their kids.<br />Good one ma'am :hatsoff: rendu part um :cool: <br />Thank you and wish you good luck for your future endeavours 👍

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.