மகிழ்ந்தார்கள். இளமதி என்று பெண்ணுக்கும் இளமுகில் என்று பையனுக்கும் பெயரிட்டார்கள். நான்கு பேரக் குழந்தைகளின் அன்பிலும் குறும்பிலும் ரம்யாவின் அம்மா, அப்பா நனைந்தார்கள். நாம பார்த்துக் கட்டி வச்சிருந்தாக் கூட ரம்யா இவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பாளான்னு தெரியலங்க என்று அம்மா சொன்னதை அப்பா ஆமோதிக்கவும், தங்கள் காதலின் வெற்றி இதுதான் என்று ரம்யா மகிழ்ந்தாள். ராஜேஷ் அண்ணாவின் பிள்ளைகள் இனியனும், மகிழனும் குழந்தைகளைப் பார்த்துக் குதூகலிக்க, நான் உங்களுக்கும் தாத்தா தான் என்று அவர்களையும் ரம்யாவின் அப்பா அரவணைத்துக் கொண்டார். ரம்யாவின் பெற்றோர் முழுமனதாய் தினேஷை ஏற்றுக் கொண்டதைப் பார்த்து ராஜேஷுக்கும் மனமெல்லாம் சந்தோஷம்.
01 மே 2017
அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, ரம்யாவின் தம்பி ரகுவின் கல்யாணம். ஒரு வாரம் முன்னாடியே கிளம்பி இங்கே வந்திருங்க மாப்பிள்ளை என்று அப்பா சொல்லியிருந்தார். தினேஷ் ரம்யாவிடம் அன்றைய தினத்தின் காலையில் தான் அவன் சர்ப்ரைசாக அவன் ஏற்பாடு செய்த பரிசுகள் பற்றிச் சொல்லியிருந்தான். தினேஷுக்கு எல்லாரின் மேலும் அன்பு அதிகம். அவன் ரகுவிற்குத் திருமணப் பரிசாக அந்தமான் டூர் பேக்கேஜை ஏற்பாடு செய்தவன் அத்தோடு நில்லாமல் ரம்யாவின் அம்மா, அப்பாவிற்கு சிங்கப்பூர் டூர் பேக்கேஜ் எனவும், அண்ணன் ராஜேஷின் குடும்பத்திற்கு தாய்லாந்து டூர் பேக்கேஜ் எனவும் ஏற்பாடுகள் செய்திருந்தான். எல்லா பேக்கேஜ்களும் ஒரு வருட வேலிடிட்டி உள்ளவே என்பதால், அவர்களுக்கு வசதியான நேரத்தில் பிரயாணம் செய்து கொள்ளலாம் என்றான். நமக்கு எந்த டூர் பேக்கேஜ், நாம எங்கேயும் போகலையா தினேஷ் என்றவளிடம், நமக்கு நம்ம வீடு தான் சொர்க்கம், நம்ம பசங்க இன்னும் கொஞ்சம் வளரட்டும் அப்புறமா நாம ஊர் சுத்துவோம் என்றான் அவளின் கன்னங்களை இரு உள்ளங்கைகளில் ஏந்தியவாறே அவனின் முகத்தருகில் கொண்டு போகவும், போதும், ஏற்கனவே நாலு பிள்ளைங்க இருக்காங்க என்று அவனைப் பிடித்துத் தள்ளினாள். சிரித்துக் கொண்டே, வேலைக்குக் கிளம்பியவன், ஒரு வாரம், எதையும் பார்க்க முடியாதுல, வயலிலும் பண்ணையிலும் வேலை விவரம் சொல்லிட்டு சாயங்காலம் சீக்கிரமா வர்றேன். ரெடியா இருங்க என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றான். இயற்கை முறை விவசாயப் பணிகள் நடக்கும் தன் வயலில் வேலைகளைப் பார்த்துவிட்டு வரும் அவனின் வருகையை எதிர்நோக்கினாள். ரகுவின் திருமண நிகழ்விற்குத் தேவையானவற்றை எல்லாம் எடுத்து பேக் செய்து வைத்துவிட்டு நான்கு குழந்தைகளையும் தயார்படுத்திக் காத்திருகையில். .அம்மா டிவி என்று வேனில் கேட்கவும், டிவியை ஆன் செய்தாள். டிவியில் பாடல் ஒலிக்க “