அதேபோல் அடுத்த நாள் சரியாக சொன்ன நேரத்திற்கு காபி ஷாப் சென்று அஸ்விட்க்கு காத்திருந்தாள்.
அஸ்விட்டிடம் நலம் விசாரிப்புகளை முடித்துக் கொண்டு நேரடியாக கேட்டாள். அஸ்விட்... நான் ஜனாவின் கடந்த காலம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று...
சிறிது நேரம் யோசித்தவன் அதற்கான காரணம் என்ன?... ஏன் ஏதாவது ப்ராப்ளமா என்றான்.
ஜனனி அந்த பெண்மணி சொல்லியதை அப்படியே சொல்ல .. அவளை என்று ஓங்கி அஸ்விட் டேபிளில் குத்த அது எழுப்பிய பேரொலியில் அனைவரும் திரும்பி பார்த்தனர்.
அதற்குள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் சுற்றி ஒரு முறை பார்த்து விட்டு மௌனமானவன் அமைதியாக பேச ஆரம்பித்தான்.
அவன் பேசிய முதல் வாக்கியமே ஜனனியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தன்சிகா... ஜனாவின் குழந்தை அல்ல.. அவள் ஜனாவின் அன்னன் ஜஸ்வந்தனுடைய குழந்தை என்பது தான் அந்த வாக்கியம்.
சிறிது நேர மௌனத்திற்கு பின்னர் தொடர்ந்தான். அந்த பெண்மணி வேறு யாரும் இல்லை... ஜஸ்வந்த் அண்ணாவின் மாமியார். அதாவது ஜனாவின் அண்ணியின் அம்மா.
ஜனாவின் அண்ணா அண்ணி இருவரும் காதல் திருமணம். அதாவது அந்த பெண்மணியின் பணத்தாசையால் தன் மகளை காதல் நாடகம் நடத்த சொல்லி ஜஸ்வந்த்திற்கு திருமணம் செய்து வைத்தாள்.
ஜனாவின் குடும்பம் பெரிய பணக்காரர்கள். அவர்கள் பணத்தை தன் மகள் மூலம் திருடி தன் மகன்களுக்கு சொத்து சேர்ந்தாள்.
முதலில் தாய் சொல்லை கேட்ட அண்ணி ஒரு நிலைக்கு பிறகு பொறுப்பான மறுமகளாகி விட்டார்கள்.
தன் மகள் மாறி விட்டாள் என்று தெரிந்ததும் இனி பணம் கிடைக்காது என்று தெரிந்த அவள் மகளையே மிரட்டி பணம் பிடுங்கினாள். கொஞ்ச காலம் இது தொடர இதற்கு மேல் அதை வளர விடக்கூடாது என்று எண்ணி அண்ணி அனைத்து உண்மைகளையும் வீட்டில் சொல்லி விட்டார்கள்.
தான் ஆரம்பத்தில் காதலிப்பது போல் நடித்தேன். ஆனால் இப்போது உங்களை உண்மையாக காதலிக்கிறேன் என்று அண்ணன் காலில் விழுந்து கதறினார்கள்.
அண்ணியை ஏற்றுக் கொண்ட குடும்பம் அண்ணியின் அம்மா மீது போலீசில் சொல்லி மிரட்டி வைத்தார்கள்.
அதனால் ஆத்திரம் அடைந்த அவள் அண்ணன் அண்ணி அம்மா அப்பா குடும்பமாக காரில்