ஸ்வீனாவை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு உங்களது கிராமத்திற்கு வந்து அங்குள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.
அவர் அங்கு இருந்தாலும் அவரது நினைவு முழுவதும் இங்கு தான். அதேபோல் ஸ்வீனாவும் அவரை தான் தன் அப்பாவாக நினைத்து வளர்ந்தாள். இப்போது அவளுக்கு அப்பா என்று சொன்னதும் நினைவு வருவது அவள் பெரியப்பா தான்.
உன்னை இங்கு வேலைக்கு அனுப்புவதற்காக அவர் உன் கையில் கொடுத்த அந்த விளம்பரம் உண்மையானது அல்ல... உன்னை பற்றி உண்மை தெரிந்த இடத்தில் நீ வாழ விரும்பவில்லை என்பதால் உன்னை பற்றி எதுவும் தெரியாத இடமாக அவர் அனுப்ப விரும்பினாலும் உன் பாதுகாப்பு கருதி ஸ்வீனாவிடம் மட்டும் உண்மையை கூறி இங்கு அனுப்பினார்.
உன்னை பற்றிய உண்மை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டாள் ஸ்வீனா.
ஆரம்பத்தில் உன்னை நம்பி ஆபிஸை ஒப்படைக்கும் எண்ணத்தில் தான் இங்கு வரவழைத்தாள். ஆனால் போக போக உன் குணம் பிடித்ததால் ஜனாவிற்கும் உனக்கும் திருமணம் செய்து வைக்க விரும்பினாள்.
அதன் பிறகு நடந்தது தான் உனக்கு தெரியுமே... இப்போது ஜனா கம்பெனி நல்ல முன்னேற்றம் அடைந்து விட்டதால் ஸ்வீனாவிற்காக அவள் விரும்பிய துறையில் தொழில் தொடங்கி கொடுத்ததோடு நம்பிக்கையான பல நபர்களை அடையாளம் காட்ட வெகு விரைவாக ஸ்வீனாவின் ஆசை கனவு நிறைவேறி விட்டது.
*************************
நட்புக்குள் பிரிவுகள் இல்லை...
நட்புக்குள் பிரிவும் இல்லை...
நல்ல நட்பு கெட்ட நட்பு என்று
பிரித்து பார்க்க ஏதும் இல்லை...
நட்பு என்றாலே நல்லது தான்...
நண்பர்கள் என்றாலே நல்லவர்கள் தான்...
உடனிருந்து துரோகம் இழைப்போர்
நட்பின் பட்டியலில் இல்லவே இல்லை...
ஆட்டுதோல் போர்த்திய ஓநாய்கள் அவை...
இரத்த சம்பந்தமில்லாத ஒரே சொந்தம் "நட்பு"
இரத்தமும் சதையுமாக இருக்கும் ஒரே சொந்தம் "நட்பு"
இதயத்தில் சுமப்பது காதல் என்றால்
இதயத்தை இடமாக கொடுப்பது நட்பு...