தன் கனவை ஓரங்கட்டி வைத்துவிட்டு அவள் கையில் இருந்த மொத்த பணத்தையும் கொண்டு சரிய தொடங்கிய பிசினஸை தூக்கி நிறுத்த உதவியாக இருந்தாள்.
அந்த உண்மை அவள் வீட்டில் தெரிந்ததும் பெரிய பிரச்சினை ஆனது. எல்லாவற்றையும் சரிகட்டி சரிந்த ஜனாவின் பிஸினஸை தூக்கி நிறுத்த போராடினோம்.
ஒரு பக்கம் தனுவைப் பார்க்க வேண்டும்... இன்னொரு பக்கம் ஆபிஸை பார்க்கவேண்டும் என்று திணறிய ஜனாவிற்கு பக்க பலமாக இருந்து கை கொடுத்தவள் தான் ஸ்வீனா. தனுவையும் அதிக நேரங்களில் பார்த்துக்கொண்டாள். நிறுவனத்தையும் நாங்கள் இருவரும் சேர்ந்து பொறுப்பெடுத்துக் கொள்ள ஓரளவு பண இழப்பில் இருந்து மீண்டு வந்தாலும் அவனது பாச இழப்பில் இருந்து அவனை வெளிக் கொண்டுவர முடியவில்லை.
அந்த நிலையில் தான் அவனுக்கு அறிமுகமானாள் ஸ்வேதா. அவன் மீது காட்டிய அவளின் கள்ள கபடம் இல்லாத பாசம் எளிதாகவே ஜனாவை மீட்டு வெளியே கொண்டு வந்தது. இந்த நிலையில் கோமா நிலையில் இருந்த அண்ணி மரணமடைந்து விட மற்ற காரியங்கள் எல்லாவற்றையும் சரி படுத்தி விட ஜனாவின் காதலும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஆனால் தனுவைப் பார்ப்பதில் ஸ்வேதா உடன்பட்டு வரமாட்டாள் என்று முதலிலேயே கணித்துவிட்டாள் ஸ்வீனா. ஆனாலும் அதை அப்படியே ஜனாவிடம் சொல்ல முடியாமல் போக என்னிடம் சொல்லி அடிக்கடி புலம்புவாள்.
அவனை விட்டுப் ஸ்வேதா பிரிந்து விட்டால் அந்த நிலையை தாங்கும் விதத்தில் ஜனா இல்லை என்பதை புரிந்து கொண்டவள் ஓரளவு மறைமுகமாக ஜனாவிடம் சொல்லிப் பார்த்தாள். ஆனால் எதையும் புரிந்துகொள்ளும் மனநிலையில் ஜனா இல்லை.
இந்த நிலையில்தான் தனுவைப்பற்றி ஸ்வேதாவிற்கு தெரியவர அந்த குழந்தையை தன் குழந்தையாக வளர்க்க முடியாது என்று நேருக்கு நேராக சொல்லிவிட்டாள்.
ஜனா எவ்வளவோ புரிய வைக்க முயற்சி செய்தான். அதே போல ஸ்வேதாவும் தன் நிலையை புரிய வைத்து ஜனாவை தன்னுடன் அழைத்துச் செல்ல போராடினாள். இருவரும் அவரவர் நிலையிலே தொடர்ந்து நிற்க ஸ்வேதா ஜனாவை பார்ப்பது பேசுவதை முற்றிலும் தவிர்த்து விட்டாள்.
அதன் பிறகுதான் அவன் மீண்டும் பிசினஸை மறக்கத் தொடங்கி உலக வாழ்க்கையை வெறுக்க தொடங்கினான். போதைக்கு அடிமையாகி பிஸினஸை மறந்து போனான்.
ஆனால் தன் அண்ணன் மகள் போல அல்லாமல் தன் மகளாகவே தனு மீது பாசத்தை காட்டினான்.
பிஸினஸ் ஓரளவு நல்ல நிலையில் சென்று கொண்டிருந்தது. ஆனால் பல லட்சம் ரூபாய்