இந்த உலகத்தில் கடைசியாக பேசிய வார்த்தை தான் அது..... நீங்க தனுவை உங்கள் குழந்தை போல பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று அவன் கைகளை பிடித்ததோடு தான் பிடித்து வைத்திருந்த சுவாசத்தை பெருமூச்சாக வெளி விட்டவள் கோமா நிலைக்கு சென்று விட்டாள்.
கிட்டத்தட்ட மூன்று மாதம் கோமா நிலையிலேயே இருந்து அதன் பிறகு இந்த உலகத்தை விட்டே சென்று விட்டாள். அதற்கு முன்பே அதாவது தன் அண்ணன் அம்மா அப்பாவை இழந்து துக்கத்தில் வாடிப் போயிருந்த ஜனாவை தேடி அடுத்த ஒரு அடி காத்திருந்தது.
அவனது அப்பாவுடன் இணைந்து தொழில் செய்த அனைவரும் தங்கள் பாகங்களை பிரித்துக்கொண்டு நியாயமாக அவர்களுக்குச் சேர வேண்டிய சொத்து ஆவணங்களை கூட எடுத்துக் கொடுக்காமல் கம்பெனி திவாலாகும் நிலையில் கம்பெனிய மட்டும் அவனிடம் ஒப்படைத்து விட்டு விலகிக் கொண்டனர்.
கம்பெனியில் அனைவருக்கும் சம்பளம் கொடுக்க முடியாமல் தன் அண்ணியின் உயிருக்காக ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டமுடியாமல் தன்னிடம் இருந்த அனைத்து பணங்களையும் செலவழித்த நிலையில் இதற்கு மேல் என்ன செய்வது என்றே தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டான் ஜனா. அப்போது அவனுக்கு கை கொடுத்தவள் தான் ஸ்வீனா.
ஜனனி உனக்கு ஸ்வீனா ஜனா இருவருக்கும் இடையே இருக்கும் உறவு முறை பற்றி எந்த அளவு தெரியும் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் மறுபடியும் ஒருமுறை சொல்லி உனக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்.
ஜனா பணக்காரனாக இருந்த பொழுதும் அவனிடம் இருந்த தாழ்மையும் பண்பும் என்னை மிகவும் கவர்ந்தது. நாங்கள் இருவரும் பணத்தின் மதிப்பு அறியாத நாட்களிலேயே நண்பர்களாகி விட்டோம். அதனால் எனக்கு ஜனாவின் பணம் பெரிதாக தெரியவில்லை. அதேபோல என் வசதிக்குறைவும் ஜனாவிற்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. நாங்கள் காலேஜ் படிக்கும் போது அருகிலிருந்த காலஜில் படித்தவள்தான் ஸ்வீனா.
ஸ்வீனா ஓரளவு வசதி வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவள். ஆனால் அவளுக்கு என் மீது ஈர்ப்பு ஏற்பட என்னிடம் பலமுறை அதை நேரடியாகவே கூறிவிட்டாள். ஆனால் அவளின் வசதி வாய்ப்பு அதை ஏற்றுக்கொள்ள என்னை தடுத்தது.
எனக்கும் ஸ்வீனாவை பிடிக்கும் என்றாலும் அவளின் வசதி அதை அவளிடம் சொல்ல விடாமல் தடுத்தது. ஆனாலும் அவள் என்னை சுற்றி வருவதை நிறுத்தவில்லை. நாட்கள் இப்படியே கடந்து சென்றாலும் நான் அவளை கண்டு கொள்வதே இல்லை.
அப்படி இருக்கும்போது ஒருநாள் என்னைத் தேடி வந்தபோது நான் இல்லாததால் ஜனாவிடம் தன் காதலைப் பற்றி வெளிப்படுத்தி இருக்கிறாள். அதோடு அஸ்ஸை எப்படியாவது என்னிடம்