(Reading time: 21 - 41 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

பணத்தை மறுபடியும் முதலீடு செய்தால் தான் கம்பெனியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்... அதோடு தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

 பணத்தை போட்டு உழைத்தால் ஒரு வருடத்துக்குள் மீண்டும் பழைய நிலையை விட அதிக அளவுக்கு மேல் கம்பெனி தரம் உயர்த்தி விடலாம். ஆனால் அந்த பல லட்ச ரூபாய் யாரிடம் கேட்பது??? கம்பெனி தற்போது சென்று கொண்டிருக்கும் நிலையில் அவ்வளவு பணத்தை யாரும் நம்பி தரமாட்டார்கள் என்ன செய்வது??? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான்னாவின் பெரியப்பாவிடம் இருந்து ஒரு போன் கால் வந்தது. அவர் பேசிய பிறகு ஸ்வீனாவின் முகத்தில் ஒரு பெரிய பிரகாசம் வந்தது.

 அப்பொழுது அவள் நேராக ஜனாவை அழைத்து உங்கள் பண்ணை வீட்டை எனக்கு தர முடியுமா என்று கேட்டாள்...

 தற்போது நீங்கள் இருக்கும் வீட்டில் தான் அவர்கள் குடும்பத்தோடு வசித்து வந்தார்கள். ஆனால் அவனது பண்ணை வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டிற்கு அவர்கள் வாரம் ஒருமுறையாவது சென்று விடுவார்கள். அவர்களது அனைத்து சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டது தான் அவர்களது பண்ணை வீடு.

உடன் பிறந்தவனையும் பெற்றோரையும் இழந்த பிறகு எப்பொழுதுமே அந்த வீட்டுக்கு செல்லாமல் அதை பூட்டி வைத்திருந்தான் ஜனா. ஆனாலும் அது அவனுக்கு ஒரு பெரிய பொக்கிஷம். ஆனால் நானே எதிர்பார்க்காத வேளையில் ஸ்வீனா ஜனாவிடம் அந்த வீட்டை தனக்கு எழுதிக் கொடுக்குமாறு கேட்டு விட்டாள்.

எனக்கு அவள் கேட்டது தவறு என்று தோன்றியது. நிச்சயம் ஜனா ஒத்துக் கொள்ள மாட்டான் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவனோ நிச்சயம் எழுதி தருகிறேன்... நீ கேட்டு உனக்காக செய்யாமல் இருப்பேனா.... அண்ணனிடம் இருந்தாலென்ன தங்கையிடம் இருந்தால் என்ன??? அது எப்போதும் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே போதும் என்று சொல்லி டாக்குமென்டரி ரெடி பண்ணு... நான் கையெழுத்துப் போட்டுத் தருகிறேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவள் ரெடி பண்ணி இருந்தா பேப்பரில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தான்.

 அவர்கள் இருவருக்கும் ஏற்பட்டிருக்கும் அந்த நம்பிக்கையான உறவை பற்றி எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் ஸ்வீனானா அதை தன் பெயருக்காக எழுதாமல் உன் பெயருக்காக எழுதி இருந்தாள்... நிரந்தரமாக அல்ல... உன்னிடம் பெற்றிருக்கும் பல இட்ச ரூபாய் பணத்தை உன்னிடம் திருப்பித் தரும்வரை மட்டுமே உனக்கு சொந்தம்... அந்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டு திருப்பி கேட்கும் போது நீ வீட்டை விட்டு வெளியேறி

6 comments

  • :dance: long long ago once upon time naan Thanu and jana patri guess seithathu correctct :dance: Interesting update jeba ma'am 👏👏👏👏👏👏👏👏👏 sweena and jana oda bonding mattum illai jana and aswith oda bonding is awesome :hatsoff: unga kavithai varigal was very much apt to the update :hatsoff: <br />Jana oda anni oda mom entha mathiriyana person 3:) jana janu va thituradhu parthu etho double role ah nu ninaichiten avaroda slang parthu 😂😂😂 janu thanoda decision la strong ah irukka vidivingala?? Jana open up avara?? Padika waiting....<br />Thank you.
  • Hi malar today episode very nice fb therinchuruchu na etha yethi pakkala thanu jana utaiya ponnu nu than ninachan super update <br />Rompa sry nijama story yota follo maranthurichu athan sonnen but unga update ahh wait pannen at one sec really very sorry hate panniruthal<br />Today episode la story continue vanthuruchu thanks a lot❤❤❤🌹🌹🌹🙏🙏🙏<br />Good luck for your next episode😊😊😊
  • wow nice &cute epi :clap: eagerly waiting 4 next epi.sweena jana friendship :hatsoff: :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.