திருமணத்திற்கு செல்லும் பொழுது விபத்தை ஏற்படுத்தி விட்டாள்.
அந்த கோரமான விபத்தில் அப்பா அம்மா அண்ணன் மூவரும் அந்த இடத்திலே இறந்து விட்டார்கள். அண்ணி சீரியஸாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள், என்றவனுக்கு வார்த்தைகள் வெளிவராமல் தொண்டை அடைத்தது.
அதைக் கேட்கும் தனக்கே தாங்கி கொள்ள இயலவில்லை. அப்படி இருக்கும் போது ஜனாவிற்கு எப்படி இருந்திருக்கும். அவனை மார்போடு அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று அவள் மனம் தவித்தது.
ஜனனி... அன்றைக்கு அந்தத் திருமண விழாவிற்கு ஜனாவும் செல்வதாக தான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஒரு முக்கியமான மீட்டிங்கில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஜனா திருமணத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஜனாவிற்கு எப்போதுமே தன் அண்ணன் மகள் தனுவின் மீது பாசம் அதிகம். அதனால் அவளை தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி அவர்களை அனுப்பி விட்டான்.
மீட்டிங் முடித்து விட்டு தனுவையும் அழைத்து வருவதாக கூறி விட்டான். குழந்தையை பார்த்து கொள்ள வேண்டும் என்று எப்போதும் குழந்தையுடன் நேரம் செலவழிக்கும் அண்ணிக்கும் அண்ணாக்கும் ஒரு ரிலாக்ஸ் கொடுப்பதாக நினைத்து தனுவுடன் வீட்டில் இருந்து கொண்டே வீடியோ கான்ப்ரன்ஸில் மீட்டிங்கை முடித்தான்.
ஜனாவிற்கு மீட்டிங் இல்லாமல் இருந்தால்.... ??? எப்படியோ இன்று அவனை பார்க்க முடிகிறதே என்று ஏக்கப் பெருமூச்சுடன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அஸ்வித் கண்களின் ஓரம் நீர் நிறைந்தது.
ஜனாவை காப்பாற்றியதற்கு கடவுளுக்கு நன்றி சொல்வதா??? அல்லது அவன் குடும்பத்தை பிரித்ததற்காக அவரிடம் முறையிடுவதா??? என்று தெரியாமல் செதுக்கிய சிலை போல அசையாமல் அப்படியே நின்றாள் ஜனனி.
அந்த அமைதியை கலைப்பவனாக அஸ்விட் மேலும் பேசினான். இந்த அடி மட்டும் போதாது என்று தொடர்ந்து பல விதங்களில் அடிக்கு மேல் அடி பட்டுவிட்டதால் ஜனா மாறி விட்டான்.
எப்போதும் சிரித்த முகத்துடன் பழகி மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவனது இயல்பான குணம்... ஆனால் சூழ்நிலைகளால் வித்தியாசமாக மாறி போனான்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது தெரிந்ததும் அவசரமாக சென்ற ஜனாவிற்கு அங்கு தன் அண்ணி தவிர மற்ற அனைவரும் இறந்து போய் விட்டனர் என்ற செய்தியைக் கேட்டதும் அப்படியே தரையில் அமர்ந்து விட்டான்.
ஆனால் சீரியஸாக இருக்கும் அவனது அண்ணி தன்னிடம் எதோ ஒன்றை சொல்ல விரும்புவதாக கூறியதும் வேகமாக தன் அண்ணியை காண சென்றான்.