பேச சொல்லுங்கள் என்று வற்புறுத்துயிருக்கிறாள்.
சற்று நேரம் அவளிடம் பேசி பார்த்த பிறகு அவளது காதல் உண்மை என்பதை புரிந்து கொண்ட ஜனா, எப்படியாவது எங்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக வாக்கு கொடுத்து இருக்கிறான்.
ஆனால் அதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஒரு நாள் நானும் ஜனாவும் காபி ஷாப்பில் இருக்கும்போது என்னை பார்ப்பதற்காக அங்கு வந்தால் ஸ்வீனா.
அவள் வந்ததும் நான் அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல நினைக்கும் பொழுது எத்தனை நாள் இப்படி ஒதுங்கி ஒதுங்கி போக போகிறாய் அஸ்விட்.... உட்காரு நாம இப்பவே பேசித் தீர்த்துக்கலாம் என்று சொல்ல இதுவரை நான் அவனிடம் சொல்லாத விஷயம் அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று முதன் முறையாக நேருக்கு நேராக ஸ்வீனாவைப் பார்த்தேன்.
அவள் விழிகள் என்னை நேராக நோக்காமல் விழி தாழ்த்தி கொண்டதிலேயே அவள்தான் எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறாள் என்று எனக்கு புரிந்தது. சற்று கோபம் வந்தாலும் யார் மீதும் காட்ட முடியாத சூழ்நிலையில் அப்படியே அமர்ந்துவிட்டேன்.
அப்பொழுதுதான் ஜனா பேசினான்... என்று சொல்லும் போதே அவன் முகத்தில் அப்படி ஒரு களிப்பு... ஏன் என்று புரியவில்லை என்றாலும் அவன் சொல்லப் போவதைக் கேட்க காத்திருந்தாள் ஜனனி.
எனக்கு ஒரு தங்கை இருந்தால் அவளுக்காக நான் எப்படிப்பட்ட மாப்பிள்ளை தேடுவேன் என்று உனக்கு தெரியுமா என்று கேட்டான்.
ஜனாக்கு தங்கை இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். அவனது நெருங்கிய உறவு வட்டத்தில் கூட அதிக பாசம் கொண்ட தங்கை யாரும் இல்லை. அப்படி இருக்கும்போது ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறான் என்று நினைத்துக்கொண்டே பதிலேதும் சொல்லாமல் அவனையே பார்த்தேன்.
அப்போதுதான் அவன் சொன்னான். எனக்கு ஒரு தங்கை இருந்தால் நிச்சயம் என் தங்கைக்கு உன்னை தான் கணவனாக நான் தெரிந்து எடுத்திருப்பேன். இப்போதும் அதையேதான் செய்ய நினைக்கிறேன்.
என் தங்கையை திருமணம் செய்து கொண்டு எனக்கு மாப்பிள்ளையாகி விடு என்றான்.
அவன் சொல்வது புரியாமல் அவனைப் பார்க்க இவள் தான் என் தங்கை என்று ஸ்வீனாவை சுட்டி காட்ட அவனைப் பார்த்து முறைத்தேன்.
உன் முறைப்பின் அர்த்தம் புரிகிறது மச்சி... அப்பாவை இப்பவே சொத்தை பிரிக்க சொல்லி இரண்டு பேரும் பாதி பாதி எடுத்து கொள்ளலாம். அப்புறம் நீ என் தங்கையை திருமணம் செய்து கொள்.. ஏனென்றால் அவளை ஏற்றுக் கொள்ள உனக்கு பணமும் சொத்தும் தானே