பிரச்சினை என்று சொல்லியவன் அப்பாவிடம் பேசி விட்டேன். அப்பாவும் கிராமத்தில் உள்ள சொத்தை உன் பெயரில் எழுதி விடலாம் என்று சொல்லிவிட்டார் என்றான்.
அவன் சொல்வது பொய் இல்லை... உண்மை என்று எனக்கு தெரியும். ஏனென்றால் அவனது பாசம் சிறு வயதிலேயே நான் அனுபவித்த பாசமாயிற்றே.. ஆனால் அவனது வார்த்தைகளில் தெரிந்த உண்மை கண்டு ஸ்வீனா மெய்சிலிர்த்து போனாள்.
இத்தனை நாட்கள் அங்கு நெருங்கிப் பழகி இருந்தாலும் எங்களுக்கிடையே பணம் பற்றிய எந்த பரிவர்த்தனைகளும் நிகழ்ந்ததில்லை. நான் வசதி படைத்தவன் இல்லை என்றாலும் என்னுடைய தேவைகளை நானே சந்தித்துக் கொள்ளும் அளவிற்கு என் பெற்றோரிடம் பணம் இருக்கத்தான் செய்தது. ஆனால் ஜனாவும் ஸ்வீனாவும் அதிக வசதி படைத்தவர்கள். அதனால்தான் ஸ்வீனாவின் காதலை நான் ஒதுக்கி வைத்தது. ஆனால் அவளை நீ ஏற்றுக் கொள்ள என் சொத்தை தருகிறேன் என்று சொன்ன என் நண்பனின் அன்பு என்னை வியக்க வைக்க வில்லை. ஏனென்றால் ஆரம்பத்திலிருந்தே அவன் என் மீது கொண்டிருக்கும் பாசம் எனக்கு தெரியும் அல்லவா... ஆனால் தங்கை என்று கூறி தன் சொத்தையே எழுதி தருகிறேன் என்று அவன் சொன்ன வார்த்தை ஸ்வீனாவிற்குள் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
அன்றிலிருந்து அவள் என்னை தேடி வருகிறாளோ இல்லையோ... அண்ணன் அண்ணன் என்று அவனைத் தேடி வராத நாட்கள் இல்லை... இப்படி பேசி பேசி அவர்கள் அண்ணன் தங்கை உறவு மட்டும் வளரவில்லை... எங்களுடைய காதலும்தான் நகர்ந்துகொண்டிருந்தது...
இப்படிப்பட்ட நிலையில் நான் தனக்கு சொந்தமான எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நிற்பதை பார்த்த பின் ஸ்வீனாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஸ்வீனாவிற்கு சிறுவயதிலிருந்தே பேஷன் டிசைனிங் மீது கொள்ளைப்பிரியம். தன் காலேஜ் படிப்பை முடித்ததும் தனியாக ஒரு டிசைனிங் நிறுவனம் தொடங்கி அதை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் அதற்காக அவள் தன் குடும்பத்தில் பணம் கேட்க அதுவே பிரச்சினையாகி ஒரு கட்டத்தில் சொத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கு பிரித்துக் கொடுங்கள். எனக்கு நீங்க எதுவும் போட வேண்டாம் என கூறியவள், எனக்குக் கொடுங்கள் அதை வைத்து நான் என் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி நான் திருப்பி அந்த பணத்தை மட்டுமல்ல அதையும் தாண்டி அதிகமாக உங்களுக்கு தருகிறேன் என்று சொல்லி வாக்கு பெற்று அவள் தொழில் நிறுவனத்தை தொடங்க பணத்தை பெற்றுக் கொண்டாள்.
தான் தொழில் தொடங்க வேண்டுமா? அல்லது தன்னை தங்கை என்று நினைத்த உடன் பிறவா சகோதரனுக்கு உதவ வேண்டுமா? என எந்த ஒரு கேள்வியும் எழவில்லை அவளுக்கு.