விட வேண்டும் என்பது போல் ஒரு பத்திரத்தை ரெடி பண்ணி இருப்பது தெரிந்ததும் அதிர்ந்து விட்டேன். அதாவது லீஸ்க்கு விட்டிருக்கிறது போல...
நீ செய்வது சரியா இருக்குமா??? அது அவனுடைய பொக்கிஷம்... அதை யாரோ ஒருவரிடம் கொடுத்து அந்தப் பணத்தில்தான் இந்த தொழிலை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க முடியுமா.... வேறு ஏதாவது யோசித்து இருக்கலாமே என்ற பொழுது என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்றாள். ஏனோ அந்த ஒற்றை வார்த்தையில் நானும் எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டேன். ஆனால் அவள் மனதில் இருந்த திட்டங்களை பற்றி எதுவும் எனக்கு புரியவில்லை. அவள் அப்பொழுது அதை விரிவாக சொல்லி இருந்தாலும் எனக்கு அதில் நம்பிக்கை ஏற்பட்டிருக்காது என்று அவன் சொல்லும்போது ஜனனியும் ஆச்சரியத்தில் ஆவென்று வாயைப் பிளந்து இருந்தாள்.
என்னாச்சு ஜனனி என்று கேட்டபோது தான் அவளுக்கு புரிந்தது. பிரபோசர் தனக்காக சென்னையில் ஒரு வீடு பார்த்து இருப்பதாகவும் அதற்காக பல லட்ச ரூபாயை கொடுத்திருப்பதாக கூறியதை கேட்டதும் ஜனனி பெரிதாக ஏதும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் எப்போது அந்த வீட்டின் உரிமையாளர்கள் மொத்த பணத்தையும் கொடுத்து விட்டு வீட்டை கேட்கிறார்களோ அப்போது அந்த வீட்டை நீ திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்பதுதான் அவர்கள் போட்டிருக்கும் கண்டிஷன்... உனக்கு ஓகே..வா என்று கேட்ட போது எதுவும் யோசிக்காமல் முதலில் இந்த ஊரை விட்டு போனால் போதும் என்று நினைத்து தலையாட்டினாள்.
இப்போது நினைத்துப் பார்த்தால் அவளுக்கு எல்லாம் புரிந்தது. அப்படி என்றால் பியபோஷர் எல்லாவற்றையும் அதாவது தன் பழைய கதைகளையெல்லாம் ஸ்வீனாவிடம் சொல்லி தான் அனுப்பி இருக்கிறார் என்று நினைக்கும் பொழுது மனதிற்குள் ஒரு வித உணர்வு ஏற்பட்டது.
அவள் உறவுகளை இழந்து யார் மீது நம்பிக்கையற்று நின்ற நிலையில் அவள் நம்பிய புரோபோசர் சொல்வதை தவிர வேறு எதிலும் அவள் மனம் லயிக்கவில்லை. அவர் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்று அவர் கேட்ட ரூபாய்களைக் கொடுத்து விட்டு அவர் கூறிய ஆலோசனை படியே சென்னைக்கு வந்திருந்தாள்.
அதை நினைத்து பார்க்கும் பொழுது அப்படி என்றால் ஸ்வீனாவிற்கும் ப்ரொபோஸருக்கும் ஒருவரை ஒருவர் முன்னமே தெரியுமா என்று பல கேள்விகள் எழ அஸ்விட்டை பார்த்தாள்.
அவள் பார்வையிலேயே கேள்வியை உணர்ந்தவன் ஆம் என்றான்.
ஜனனி... ஸ்வீனாவின் பெரியப்பா தான் உன் நம்பிக்கைக்குரிய ப்ரோபோஸர். அவருக்கு குழந்தை இல்லாததால் ஸ்வீனாவை அவரது மகள் போலவே வளர்த்து வந்தார். அவள் எட்டாவது படிக்கும் சூழ்நிலையில் அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சிறு சலசலப்பு காரணமாக