தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 15 - சசிரேகா
தாட்சாயணியும் நாள் தவறாமல் சக்தியை கோயிலுக்கு அழைத்துச் சென்று அவளை விளக்கேற்ற வைத்து வேண்டிக் கொண்டார். தனக்குதான் பிள்ளை பேறு இல்லை சக்திக்காகவாவது பிள்ளை பிறக்க வேண்டும், தன்னைப் போல் அவளும் மலடியாகி விடக்கூடாதென அந்த பரிகாரம் இந்த பரிகாரம் அந்த பூஜை இந்த வேண்டுதல் அது இது என அனைத்தையும் ஒன்றுவிடாமல் செய்தார், இதில் மரத்திற்கு தொட்டில் வேறு கட்ட சொல்ல அதைப்பற்றி அறியாத சக்தியும் முதலில் கட்டிவிட்டு பின் விளக்கம் கேட்டு சிரித்தாள்
”தொட்டில் கட்டினா குழந்தை உண்டாகுமா, இது அபத்தமா இருக்கும்மா”
...
This story is now available on Chillzee KiMo.
...
n>. ஆனால் வீட்டிற்கு வந்ததும் இதை பற்றி பாரதியிடம் விளக்கமாக சொல்ல அவனோ கோபம் கொண்டான்
”என்ன சக்தி நீ அவங்க விரதம் இருந்தா நீ உடனே வேணாம்னு சொல்லியிருக்கலாம்ல”